2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை தமிழ் சங்கம் நடத்திய கன்னி கவி அரங்கம்

Kogilavani   / 2011 மே 30 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை தமிழ் சங்கம் நடத்திய கன்னி கவி அரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை நால்வர் கோட்ட தாமரை மண்டபத்தில் நடைபெற்றது.

பாவாணர் அக்கறை பாகியான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு தமிழ் சங்க சரித்திர ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் பிரதம அதிதியாகவும் மணிக்கவிராயர் என்.மணிவாசகன் சிறப்பு அதிதியாகவும் பேராசிரியர் எஸ்.ராஜேஸ்வரன் விசேட அதிதியாகவும் கலந்து உரை நிகழ்த்தினர்.

கவி அரங்கில் கவிஞர்களான முகில்வண்ணன், பரதன் கந்தசுவாமி, காரைதீவான் சி.இராமநாதன், எஸ்.பரமனாதப்பிள்ளை, எஸ்.துசியந்தன், எஸ்.கணேஷ், தம்பிலுவில் ஜெகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சரித்திர ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம்,  'தமிழ் கல்வெட்டுகள் இலங்கையில் நான்கு இடங்களில் மாத்திரமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  அதில் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும். தமிழ் போற்றி புகழ்பாடும் இம் மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்படுவது வேதனை தருகிறது. இதனை தடுக்க எமது இளைய தலைமுறையினருக்கு தமிழ் இலக்கிய வரலாறு தெரிந்திருக்க வேண்டும்' என கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .