2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் எஸ்.பிக்கு தென் கிழக்கு பல்கலை மாணவர்கள் எதிர்ப்புக் கூச்சல்

Super User   / 2011 மே 30 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு உயர் கல்வி அமைச்சர் வருகை தந்தபோதே மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் ஸ்ரீ, அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த பொலிஸாரினால் சில மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க போரதனை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழங்களுக்கு விஜயம் செய்த போது பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஹனீக் அஹமட்

 


You May Also Like

  Comments - 0

  • A.M.Sahmy Tuesday, 31 May 2011 01:43 AM

    wrong information.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .