Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 21 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
அகில இன நல்லுறவு ஒன்றியத்தினாhல் வழங்கப்பட்ட சாமஸ்ரீ தேசமானிய விருதினை பெற்ற கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை அதிபர் அருட் சகோதரர் எம்.ஸ்ரீபன் மத்தியூவை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
கல்வி, கலாசார, சமூக சேவைகளை சமூகத்திற்கு வழங்கி சமூக ஒற்றுமையையும் சமாதானத்தையும் சமூகங்களிடையே கட்டியெழுப்பியமைக்காக இவ்விருதினை அவர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டு, திருகோணமலை மறைமாவட்ட நிதி பொறுப்பாளர் தேசமான்ய தேசபந்து அருட்தந்தை பேராசிரியர் சிறிதரன் சில்வஸ்டர், சிறப்பு விருந்தினர்களாக புனித காணிக்கை ஆலய பங்குத்தந்தை இன்னாசி யோசப், அருட்சகோதரர் லோரன்ஸ், அருட்சகோதரர் பிரதாப், பிரதி கல்விப் பணிப்பாளர் பி.சிவப்பிராசம், பிரதேச கல்வியதிகாரி திருமதி கே.தயாசீலன் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago