Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
'நேற்று வியாழக்கிழமை இரவு 7.00 மணியிருக்கும். எங்கள் வீட்டின் வெளியிலிருக்கும் நீர்க் குழாயில் குளித்துக் கொண்டிருந்தேன். நான் குளித்துக் கொண்டிருந்த இடம் வேலியோரமாகும். அப்போது வேலியின் மேலால் இரண்டு கைகள் என்னை நோக்கி வந்தன. நான் கத்திக் கொண்டு அந்தக் கைகளைத் தட்டி விட்டு – வீட்டுக்குள் ஓடி விட்டேன்'
இவ்வாறு – மர்ம மனிதனால் சம்மாந்துறையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சாந்தி (27 வயது) எனும் பெண் விபரித்தார்.
சாந்தி – புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தொழில் காரணமாக தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கடந்த 07 மாதங்களாக சம்மாந்துறையில் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார். சாந்தியின் உறவினர்கள் பலர் சம்மாந்துறையில் உள்ளனர்.
நேற்று இரவு சாந்தியை அச்சுறுத்தும் வகையில் மர்ம மனிதரொருவர் நடந்து கொண்டார். குறித்த மர்ம மனிதரை பொதுமக்கள் விரட்டிச் சென்ற போது, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்துக்குள் மர்ம நபர் புகுந்து கொண்டார் என பொதுமக்கள் தெரிவித்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சாந்தி எனும் பெண்ணை – இன்று நாம் சந்தித்துப் பேசியபோதே அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ
'நான் வெளியிலுள்ள நீர்க் குழாயில் குளித்துக் கொண்டிருந்தேன். அருகில் வேலி அமைந்திருக்கிறது. கிடுகு வேலி. அதனையொட்டி தாவரங்கள் வளர்ந்திருக்கின்றன. நான் குனிந்து நீரை அள்ளிய போது என்மேல் இலைகள் கொட்டின. நிமிந்து பார்த்தேன்... வேலியின் மேலால் இரண்டு கைகள் என்னை நோக்கி வந்தன.
அது மர்ம மனிதன்தான். அவன் கைகளை வேலியின் மேலால் கொண்டு வந்த போதுதான் தாவரங்களிலிருந்த இலைகள் கழன்று என்மேல் விழுந்தன.
என்னை நோக்கி வந்த அவனின் கைகளை – நான் தட்டி விட்டேன். அப்போது அவனின் நகம் என் கைமேல் கீறி விட்டன. நான் கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டேன். பிறகு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை கூப்பிட்டேன்' என்றார்.
சாந்தி - மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.
சம்மாந்துறை பொலிஸாருக்கும் - பொதுமக்களுக்குமிடையில் நேற்று இரவு ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து இன்று – விஷேட அதிரடிப்படையினர் சம்மாந்துறைப் பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
Naan Friday, 12 August 2011 11:28 PM
இது உண்மையா இல்லையா, எல்லோருக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
53 minute ago
55 minute ago