Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
சம்மாந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மர்ம மனிதன் என சந்தேகிக்கப்படும்; ஒருவரை துரத்திச் சென்ற நபரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை கோரக்கோயிலை சேர்ந்த வெள்ளையன் மோகன் (40வயது) என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
இவர் மர்ம மனிதன் என சந்தேகிக்கப்படும் ஒருவரை துரத்திச்சென்றபோது மதுபோதையில் வந்த மற்றொருவர் இவர் மீது சரமாரியான கத்திக்குத்தை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கத்திக்குத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
46 minute ago
48 minute ago