2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவா கிறீஸ் மனிதன் விவகாரம் என ஜனாதிபதி சந்தேகம்: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2011 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே இந்த கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினாரென்று நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் நேற்று இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அலியார் முகம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கத்தில் இன்று சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர், பொத்துவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

ஜனாதிபதி இன்று அதிகாலை தனது சீன விஜயத்தை முடித்து விட்டுத் திரும்பும் போது அவரை நான் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று சந்தித்து - பொத்துவில் விடயம் சம்பந்தமாகக் கதைத்தேன். அந்த வகையில் அவருடைய செய்தியையும் உங்களுக்குச் சொல்லவுள்ளேன்.

நேற்றைய சம்பவத்தின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சகோதரர் தொடர்பில் ஜனாதிபதி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். அதேவேளை, நடந்த சம்பவம் குறித்து ஒரு நியாயமான - நேர்மையான விசாரணையை நடத்துவதற்குத் தான் பணிப்புரை விடுப்பார் எனவும் கூறினார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் 'கிறீஸ் மனிதன்' எனும் பிரச்சினை தோன்றியுள்ளது.

நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து விட்டு அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பு பஞ்சிகாவத்தை வழியாக வரும்போது, அவ்விடத்திலும் கிறீஸ் மனிதன் பிரச்சினையால் மக்கள் திரண்டிருந்தார்கள். அந்த வழியால் ஜனாதிபதி வந்திருந்தால் அதைக் கண்டிருப்பார்.

ஜனாதிபதி கூட, வேண்டுமென்றே தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே இந்த கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக - இளம் பெண்களின் மார்பிலிருந்து ரத்தம் தேவைப்படுகிறதாம், அதற்கான முயற்சிகள்தான் நடைபெறுகிறதாம் என்று இல்லாத – பொல்லாத பல கட்டுக்கதைகள் உருவாக்கி விடப்பட்டுள்ளன என ஜனாதிபதியே மிகவும் கவலைப்பட்டு என்னிடம் கூறினார்.

பொத்துவில் பிரச்சினையில் இராணுவத்தை அழைத்தமைதான் பிழையான விடயம் என்று ஜனாதிபதியிடம் நான் கூறினேன். அத்தோடு, பொத்துவிலிலுள்ள இராணுவத்தை எடுத்து விட்டு, தற்போது அங்கு அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்துவோம். அப்போது தான் மக்கள் ஆசுவாசப்படுவார்கள் என்று ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறேன். இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் - தான் பேசுவதாக ஜனாதிபதியும் கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான மஹ்ஜுனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இடம்பெற்ற சகோதரர் மஹ்ஜுனின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மிகவும் கவலையும் துக்கமும் அடைவதாகவும், இந்த மரணம் தொடர்பிலான இழப்புக்குரிய நஷ்ட ஈடுகள் மற்றும் உதவிகள் அனைத்தினையும் அரசாங்கம் வழங்கும் என்கிற செய்தியையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

இராணுவத்தினர் வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களைத் தாக்கியமையினால் தான், மக்கள் ஆத்திரமடைந்து பொத்துவிலில் இராணுவத்தினரை எதிர்த்தனர் என்பதையும் நாம் ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறோன்.

இராணுவத்தினருக்கு கலகம் அடக்கும் விடயத்தில் அனுபவம் கிடையாது. கலகம் நடந்த ஓர் இடத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குத்தான் இராணுவம் பொருத்தமானவர்கள். கலகம் அடக்குவதற்கு இராணுவத்தைக் கொண்டு வந்து விட்டால் - அவர்கள் காட்டு மிராண்டி மாதிரி நடந்து கொள்வார்கள். அதுதான் பொத்துவிலில் நடந்திருக்கிறது.

நேற்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பொலிஸ் மா அதிபரிடமும் நான் விரிவாகப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டேன்.

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில், சம்மாந்துறை மற்றும் இறக்காமம் ஆகிய மூன்று இடங்களில் சட்டமும் ஒழுங்கும் சிறிதளவு கட்டு மீறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பேரினவாதம் தொடர்பில் நமக்குள்ள பயத்தினையும் கோபங்களையும் இந்த சம்பவங்களினூடாக நாம் வெளிக்காட்டுகின்றோமோ தெரியவில்லை.

பொலிஸ் மா அதிபர் நேற்றுக் கூட, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு – 'கிறீஸ் மனிதன் என்று யாருமே இல்லை. இது வெறும் வதந்தி. தயவு செய்து இதை மக்களிடம் விளங்கப்படுத்துங்கள்' என்று என்னிடம் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார் என்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், எம்.ஏ.அப்துல் மஜீட் மற்றும் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0

  • naleer Sunday, 14 August 2011 08:31 PM

    நீரும் நெருப்பும் ஒன்றாய் சேர்த்தது எதனால் யா அல்லாஹ்?

    Reply : 0       0

    abc Sunday, 14 August 2011 03:14 PM

    சிறந்த முடிவு.. இந்த விடயத்தில் அவசரமான தீர்வை பெற்றுத் தருமாறு முழு இலங்கையர் சார்பாகவும் வேண்டிக் கொள்கிறேன்..

    Reply : 0       0

    osai Sunday, 14 August 2011 03:58 PM

    இன்று எங்களுடைய சகோதர சகோதரிகள் எத்தனையோ பேர் மர்ம மனிதனை பார்த்த பிறகும் இவர் இங்கு வந்து போலீஸ் கூறிய கட்டுக் கதையை வாய் கூசாமல் சொல்கின்றாரே! மர்ம மனிதனை உரை விட்டு விரட்டு வதற்கு முன் அரசியல் ஆசாமிகளை விரட்டுங்கள் சகோதரர்களே ......

    Reply : 0       0

    osai Sunday, 14 August 2011 04:09 PM

    நோன்பு திறப்பதற்கு போன நேரத்தில் நோன்பு திறக்க வரவிடாமல் இவரை உரை விட்டு விரட்டியவர்தான் இந்த அவர் இவர் . ஆனால் இங்கே இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் இருக்கின்றார்கள் ..மாசால்லாஹ் .....

    Reply : 0       0

    uvais.m.s Sunday, 14 August 2011 04:37 PM

    மர்ம மனிதன் என்று யாருமே கிடையாது. பொதுமக்களின் சந்தோசத்தையும் நிம்மதியையும் கெடுக்கும் புரளியே இது. அப்படி மர்ம மனிதனை கண்டதாக சொல்லுபவர்களும் பொய் தான் சொல்லுகிறார்கள் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல பெண்களின் இரத்தம் எடுப்பதாக கிளம்பிய புரளியால் வீடுகளில் உள்ள பெண்களுக்கு பூனை வீட்டின் மேலாக ஓடினாலும் கூச்சல் போட்டு கத்துவதால் மாக்கள் கலவரம் அடைகின்றனர். வேறு மர்ம மனிதன் என்பது கிடையாது

    Reply : 0       0

    ALLAHU AKBAR Sunday, 14 August 2011 05:36 PM

    அஸ்ஸலாமு அழைக்கும் அமைச்சரே. நீங்கள் சொல்வது உண்மை என்றால் மலையகுத்தில் நடந்தது ஏல்லாம் என்ன.??? இது உங்களின் வீட்டில் நடந்தால் என்ன சொல்வீர்கள்.???????

    Reply : 0       0

    We are Sri Lankan Sunday, 14 August 2011 07:05 PM

    நம் தலைவர்களின் முகத்தில் சிரிப்பு, மக்கள் மக்களில் சோகமும் கண்ணீரும்!! இதுதான் நமது தலை எழுத்தோ!!!

    Reply : 0       0

    Citizen Sunday, 14 August 2011 07:10 PM

    இப்போது நடப்பவை, மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் கடைசி கால நிகழ்வுகளை நினைவுட்டுகின்றன!

    Reply : 0       0

    ameer Sunday, 14 August 2011 07:51 PM

    நீங்களும் நோன்பு காலத்தில் உண்மை பேசுங்கள்.
    நீண்ட காலத்தின் பின்னர் தலைவரை கண்டுகொண்டோம்
    அடுத்த படம் ஓடுமா...................

    Reply : 0       0

    kulappam Sunday, 14 August 2011 02:34 PM

    உண்மை 25% பொய் 75%

    Reply : 0       0

    riyaz Sunday, 14 August 2011 08:45 PM

    அரசாங்க நாடக மேடையில் எமது அமைச்சர்கள் சிறந்த நடிகர்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 14 August 2011 09:06 PM

    இதில் காலூசிகள் 25%, அரை லூசிகள் 25%, முக்காலூசி 25% , நல்லதுகள் 25% எனவே எதனையும் சரியாக புரிந்து கொள்ளனும் சும்மா? அவன் அது சொல்றான், இவள் இப்படி சொல்றாள், அங்கு இது நடக்குது இங்கு அது நடக்குது இப்படி எல்லாம் இன்னும் வதந்தி வரும். மனிதா உனக்கு ஆறு அறிவு எதற்கு? தேங்கா திருவயா இருக்கு எல்லா வற்றையும் நன்றாக சிந்தித்து செயல் படனும் அல்லவா? சிந்தித்து செயல்படு அல்லது சிந்தித்து சொல்பவனின் கதை கேள்.

    Reply : 0       0

    பிச்சைக்காரன் இலங்கையில் பிறந்த பொதுமகன் என்றாலே அதுதானே Sunday, 14 August 2011 09:20 PM

    பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடிவிடுற மாதிரி நல்லாவே நடத்துறாங்க நாடகம்... நீங்க நல்ல ஆட்சி தருவீங்க என்றுதானே உங்களுக்கு ஒட்டு போட்டோம். நீங்க அதைதான் செய்யல்ல. குறஞ்சது மக்களை நிம்மதியாகவாவது வாழ விடுங்க... நிச்சயமாக நாளை மறுமையில் அனைவரும் விசாரிக்கப்படுவர்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 14 August 2011 09:50 PM

    காவத்தையில் முதல் மர்ம மனிதன் தோன்றினான், இது கிழக்குக் செல்லும் போது இனவாத ரூபம் எடுக்கின்றது. காரணம் ஏன்? கிழக்கில் 3 இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதான ஒரு கற்பனையினால் தான் அங்கே 3 இனங்களும் 3 உதவி அரசதிபர் பிரிவுகளில் அடக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே இலேசான சலசலப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது. பரிகாரம் என்ன? கொலைகளை தவிர்க்கவேண்டும் என்றால் கொள்ளையர்கள் காமவெறியர்கள் கொல்லப்படுவோம் என்று பயப்படும் படியாக இருக்கும் நிலையே.

    Reply : 0       0

    Faizaariha Sunday, 14 August 2011 10:03 PM

    கண்ணால் கண்டதும் பொய், கொடுமைகளுக்கு ஆளானவர்கள் சொல்வதும் பொய், ஆஸ்பத்திரியிலே சில பெண்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டிருப்பதும் பொய், சில மர்ம மனிதர்களை பிடித்து பொலிசில் ஒப்படைத்ததும் பொய்... ஜனாதிபதி சொல்வது மட்டும் உண்மைங்கோ....? மீன்களுக்கு நீந்த சொல்லிக்கொடுக்கணுமா ? அரசியல்வாதிகளுக்கு பேச சொல்லிக்கொடுக்கணுமா ?

    Reply : 0       0

    MA Monday, 15 August 2011 06:40 AM

    அல்லாஹ்தான் இதிலுள்ள உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

    Reply : 0       0

    A.Riyal Monday, 15 August 2011 06:43 AM

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா (அரசியல் வாதிகளே) சொல்லுங்கள்..?? நீங்கள் பேசுவது ஒன்றும் எமக்கு ஆச்சர்யமூட்டவில்லை ஏனென்றால் உங்களுக்கு உங்கள் பதவிதானே முக்கியம்.... இப்ப போனா இனி அடுத்த தேர்தலுக்குதான் உங்களைக் கானலாம்.

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 16 August 2011 10:35 PM

    அமைச்சர்களை குற்றம்சாட்டுவதில் நியாயமில்லை . அமைச்சர் ஹகீம் நியாயமாக பேசியுள்ளார் . ஜனாதிபதிக்கு நேரடியாக நிலைமையை புரியவைத்தது நல்லவிடயம் தானே. உண்மையில் இவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும். கட்சியையும், பதவியையும் விட்டு விலகலாம், இதனால் அரசுக்கெதிராக எதை சாதிக்கமுடியும்? தமிழர்கள் விவகாரமே இதற்கு சான்று.

    Reply : 0       0

    neethan Sunday, 14 August 2011 05:19 AM

    ஜனாதிபதி அவர்களே எங்கள் மீதுமா உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது? நாங்கள் என்ன ஜெயா அம்மாவின் ஊரா? நாங்கள் இலங்கையர்கள் சந்தேகம் வேண்டாம்.

    Reply : 0       0

    rakkish Sunday, 14 August 2011 03:39 AM

    அரசியல் மட்டங்கள் எல்லாம் பொது மக்கள் கண்டபவைகளும், நடந்த சம்பவங்களும் வதந்தி என்று சொல்கிறது.. இவர்களில் யாராவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ, அந்த உரிய பிரதேச மக்களிடமோ விசாரணை செய்தார்களா?? இல்லை .. போலீஸ் மா அதிபர் அங்கிருந்து கொண்டு இங்கு வதந்தி என்கிறார். இவர் இங்கு வந்து சாட்சி சொல்கிறார்.மக்கள் பிரதிநிதிகள்...ஹா..ஹா..

    Reply : 0       0

    Abdul salam Sunday, 14 August 2011 03:47 AM

    நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றோம் நன்றி மு கா தலைவரே.

    Reply : 0       0

    gaf Sunday, 14 August 2011 04:06 AM

    நீங்கள் பேசிக்கொள்றீங்க ஏன் உங்களது ஆதரவாளர்களை பேசிக்கொள்ள விடுகிறீங்க இல்லை?. உங்களால்தான் அம்பாறை மாவட்டம் சீர்குலைந்து கிடக்குது .

    Reply : 0       0

    gaf Sunday, 14 August 2011 04:14 AM

    நல்ல நடிகர்கள் கூடி இருக்கார்கள். படம் நல்லா ஓடும் .

    Reply : 0       0

    neethan Sunday, 14 August 2011 04:32 AM

    பாரபட்சமற்ற விசாரணையின் முடிவு பத்தோடு பதினொன்றாக அமையாவிட்டால் சரிதான்? இலங்கையின் வரலாறு " விசாரணை கொமிசன்களால்" கின்னேஸ் சாதனை நிகழ்ந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை.:

    Reply : 0       0

    hilmy Sunday, 14 August 2011 04:44 AM

    காமெடி விடயம் போல சிரிக்கிறார்கள்.

    Reply : 0       0

    suddi Sunday, 14 August 2011 04:55 AM

    மாசா அல்லாஹ் இதிலாவது முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எல்லாபுகழும் இறைவனுக்கே.

    Reply : 0       0

    ruban Sunday, 14 August 2011 04:59 AM

    நடக்கட்டும் நாடகம் ,நல்லா நடிக்கிறாங்க!!!!!!!!!

    Reply : 0       0

    rat Sunday, 14 August 2011 03:17 AM

    நான் சொல்ல மாட்டேன், அத மட்டும் நான் சொல்ல மாட்டன் நான் சொல்ல மாட்டன், அத மட்டும் நான் சொல்ல மாட்டன், நாட்டு நடப்பு நல்லம் இல்ல, .................

    Reply : 0       0

    AJ Sunday, 14 August 2011 05:22 AM

    திரு ஹக்கிம் அவர்களும் மர்மமனிதர் மாதிரி அல்லவே பேசுறார்.

    Reply : 0       0

    rinos Sunday, 14 August 2011 06:11 AM

    காலம் சென்ற மகூஜுன் குடும்பத்துக்கு எங்கள் அரசாங்கத்திடம் இருந்து நல்லதொரு தீர்வு கிடைக்குமா?

    Reply : 0       0

    Green Peace Sunday, 14 August 2011 08:06 AM

    இப்ப வந்து போனா.. இனி 40 அல்லது 100 ம் கத்தத்துக்கு வருவாங்க...

    Reply : 0       0

    mubarack Sunday, 14 August 2011 08:12 AM

    இலங்கை ஹிரேஸ் மனிதன் என்பவான் யார் அவனிடம் இதனை செய்ய சொல்வது யார் ?

    Reply : 0       0

    mohamed Sunday, 14 August 2011 09:59 AM

    அரசியல் நாடகங்கள் அரங்கேறும் இடம் இப்போது பள்ளி வாசல்கள் ஆகிவிட்டது. கமல்ஹாசனுக்கு பிறகு ஹகீம், ரஜினிக்கி பிறகு அதாவுல்லாஹ்.

    Reply : 0       0

    Nefeel Sunday, 14 August 2011 10:22 AM

    மர்ம மனிதன் பற்றிய வதந்தி பரப்ப மீடியாக்கள் மிக முக்கியமாக செயற்படுகின்றன.

    Reply : 0       0

    ar Sunday, 14 August 2011 01:38 PM

    கிரீஸ் மனிதர்கள் என்று துரத்தப்படுவோர் ஏன் படையினரிடம் தஞ்சமடைகிறார்கள் ? இதற்கான விடையை தருமா அரசு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8