Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டுமாயின் இரண்டாயிரம் பெண்களின் மார்பிலிருந்து இரத்தத்தை எடுத்து அதன் மூலம் மாந்திரீகம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காகவே கிறீஸ் மனிதர்கள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுவரும் கதைகள் பொய் வதந்திகளே.
அவ்வாறானதொரு தேவை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் 20 இலட்சம் பெண்களே நேரடியாக வந்து வரிசையில் நின்று தங்களது மார்பிலிருந்து இரத்தத்தை எடுத்துக் கொடுத்திருப்பார்கள்' என்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி கூறினார்.
உண்மையில், மர்ம மனிதர்களின் நடமாட்டத்துக்கும் ஜனாதிபதிக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் கதைகள் அனைத்தும் வதந்திகளாகும். ஜனாதிபதி மீதும்; அரசாங்கம் மீதும் விரோமுள்ளவர்களே இவ்வாறான கதைகளை உருவாக்கியுள்ளனர். இது ஜனாதிபதிக்கு எதிரான சூழ்ச்சியாகும். இதை மக்கள் நம்பக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொத்துவில் பிரதேசத்தில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கத்தில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர் - பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாடும் போதே அமைச்சர் பௌஸி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றி அமைச்சர், 'கடந்த 30 வருடங்களாகக் கஸ்டப்பட்டு விட்டோம். இப்போது நிம்மதியான சூழ்நிலை உருவாகியுள்ளது. நாம் நிம்மதியாக வாழ வேண்டும். இப்போது உருவாகியுள்ள நிம்மதியான சூழ்நிலையை அனுபவிக்காமல் நாம் பிரச்சினைகளில் சிக்கிவிடக்கூடாது.
இராணுவ அதிகாரியொருவரிடம் நான் தொலைபேசியில் உரையாடும் போது, கல்லடிபட்டுத்தான் சகோதர் மஹ்ஜுனுக்கு மரணம் ஏற்பட்டதாக என்னிடம் கூறினார். இது நம்பும்படியான கதையில்லை. மஹ்ஜுனின் மரணம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீத் - சாட்சியாக உள்ளார். அவரின் சாட்சியத்தை பொலிஸாரிடமும் தெரிவித்துள்ளார்.
எனவே, இது குறித்து கவலைப்பட வேண்டாம். மஹ்ஜுனின் மரணத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார். அதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக – உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சூழ்ச்சியில் மக்களும் பயன்படுத்துகின்றார்கள். எனவே, இந்த சூழ்ச்சியில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
பொதுமக்களாகிய உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எம்மிடம் பேசுங்கள். எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்து தருவோம்' என்றார்.
suhaib Monday, 15 August 2011 10:48 PM
ஹாஜி, உங்கள் பேச்சை உங்கள் மூளையுடன் தொடர்பு படுத்துங்கள்.
Reply : 0 0
MA Monday, 15 August 2011 06:23 AM
பேசத்தெரியா விட்டால் வாய் மூடியிருங்கள்.ஒரு முஸ்லிம் நோன்போடாவது பொய் சொல்லாமல் இருங்கள்.
Reply : 0 0
nifras Monday, 15 August 2011 07:45 AM
க்றிஸ் மனிதன் எனப்படும் மர்ம மனிதனின் நோக்கம் தான் என்ன ?
Reply : 0 0
Jon Monday, 15 August 2011 08:27 AM
பதவியை தக்க வைத்துக்கெள்ள இப்படி பேசுகிறார் மாப்பிள்ளை, ஏதாவது எதிராக பேசினார் வீடு போகும்போது நாட்காலி நிச்சயமில்லை.
Reply : 0 0
faroos Monday, 15 August 2011 03:10 PM
தத்தளிக்கும் தம் சமூகத்திற்கு தகுத்த பேச்சை பேசுங்கள் .
Reply : 0 0
sivaneswaran thanushika Monday, 15 August 2011 03:12 PM
marma manithanda unmaya? ith ellam yaaru nambuva???????
Reply : 0 0
faroos Monday, 15 August 2011 03:17 PM
பொத்துவில் பேச்சு, புத்தி எங்கே போச்சு? யோசனை பகுதி, பதுங்கி போச்சு.
Reply : 0 0
firnaz Monday, 15 August 2011 03:20 PM
யா அல்லாஹ் முஸ்லிம் சமுதாயத்தில் நல்ல முன்மாதிரியை கொடுத்து விடு யா அல்லா !!!! அமீன்
Reply : 0 0
s.r.lambart Monday, 15 August 2011 04:59 PM
சபாஷ் அமைச்சரே! நல்லா சொன்னீயளுவ நோன்பு வாயோட.
Reply : 0 0
Sri Lanka Mujahedin Monday, 15 August 2011 06:17 PM
Our Muslim Mps are looking after their seat only; they are not to worry about Muslim. Did government catch any body regarding grease thief? Remember that We are not mad here to believe all garbage talk here.
Reply : 0 0
thameem Monday, 15 August 2011 08:11 PM
அவர் வைத்தது தாடி, ஆனால் வர மாட்டார் முஸ்லிமை தேடி, காபிருக்கு ஏதும் என்றால் ஓடுவார் தேடி.
Reply : 0 0
¨³�� Monday, 15 August 2011 05:43 AM
வெட்கமாயிருக்கு ஹாஜி என்று சொல்ல.வெந்த புண்னில வேல் பாய்ச்சவா வந்தீங்க? முதலில் உங்கட குடும்பத்துட இரத்தத்தை கொடுக்கப்பாருங்க. வக்காலத்து வாங்குவதற்கும் ஒரு அளவுன்டு. நீங்க அரசியலில் இருக்கும்போது ஒரு போதும் சிறுபான்மை சமுகங்களுக்கு விமோசனமே கிடைக்காது. பள்ளிவாசலுக்குல் இருந்து பேசுகிற பேச்சா பேயியிருக்கிறீங்க....?
Reply : 0 0
ummpa Tuesday, 16 August 2011 12:10 AM
நீங்கள் சொல்லுவதில் அர்த்தம் உண்டு . உங்களுக்கு விரைவில் அமைச்சர் பதவிதான் !
Reply : 0 0
naleem Tuesday, 16 August 2011 01:24 AM
இப்படியும் பேசுவீங்க இதவிடவும் பேசுவீங்க... முள்ளத்தான் தீண்டுட்டீங்களே ஹாஜி.
Reply : 0 0
aroos Tuesday, 16 August 2011 02:58 AM
செக்சியான பேச்சு
Reply : 0 0
aroos Tuesday, 16 August 2011 03:02 AM
அமைச்சரின் குடும்பத்தாரும் தயாரா ?
Reply : 0 0
kamaldeen Tuesday, 16 August 2011 04:11 AM
தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும். உங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் இரத்தம் கொடுக்கத்தயாராக இருக்கிறார்களா? உண்மையிலே இது ஒரு வதந்தி என்றால், முதலில் அதை நிரூபிக்க சொல்லுங்கள். அதை விடுத்து முழு சமூகத்தையும் ஒட்டு மொத்தமாக முட்டாளாக்க முயலாதீர்கள்.
Reply : 0 0
oorkuruvi Tuesday, 16 August 2011 04:14 AM
மாமா உங்க வீட்டுப pengalai பற்றியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இப்படியல்லாம் பப்ப்ளிகல பேச மாட்டிங்க.
Reply : 0 0
rina Tuesday, 16 August 2011 04:25 AM
பௌசி அவர்களே அரசியல் பேசே இதுவல்ல நேரம். உங்களுடைய வீடுக்கு கிரீஸ் மனிதன் வருவதுக்குள் பாதுகாத்து கொள்ளுங்கள்.உங்களுடைய வீடுக்கு அவன் வந்தாலும் கவலை பட நாங்கள்தான் வேண்டும். உங்களுடைய அரசியல் லாபதிட்கு எங்களுடைய பெண்மணிகளா விருந்து.
Reply : 0 0
IBNU ABOO Tuesday, 16 August 2011 07:49 AM
மிக நீண்ட காலத்துக்குப்பின் அமைச்சர் பவ்சி முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது .பாவம் விடுங்கப்பா மனுஷன் பேசி தொலைக்கட்டும். அந்த ரத்த சமாசாரத்துக்கு அமைச்சர் ரெடியா?
Reply : 0 0
hassan Tuesday, 16 August 2011 08:26 PM
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதோ ??
Reply : 0 0
xlntgson Tuesday, 16 August 2011 09:44 PM
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..."
Reply : 0 0
ali Sunday, 14 August 2011 09:48 PM
mvmkjk
Reply : 0 0
Risvi Sunday, 14 August 2011 06:51 PM
எது உண்மை எது பொய்யாக இருந்தாலும் உண்மையாகவே மர்ம மனிதன் நடமாடுகிறான் நோக்கம்- எப்படி இருப்பினும்.
Reply : 0 0
nowshed Sunday, 14 August 2011 07:11 PM
அட அட அட அட என்ன உரையாடல் ...
Reply : 0 0
AJ Sunday, 14 August 2011 07:39 PM
வெட்கமாக இருக்கிறது இவரின் பேச்சை வாசிப்பதுக்கு.
எங்கு இருக்கிறது பெண்கள் அமைப்புகள் ?
Reply : 0 0
sopnam Sunday, 14 August 2011 08:15 PM
அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அரசின் ஊதுகுழல்களாக இல்லாமல் எப்போது முள்ளந்தண்டுள்ளவர்களாக மாருகின்றன்ரோ அன்றுதான் இந்த மர்ம மனிதன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும்..
Reply : 0 0
Mudassar Sunday, 14 August 2011 08:51 PM
எனது இஸ்லாமிய அன்பு சகோதரர்களே,
அமைச்சர் பேசும் போது ஏன் வாய் முடி மௌனித்திருந்திர்கள்?
எவராவது கேட்டார்களா ஏன் கிறீஸ் மனிதர்கள், ஏன் எதற்கு வந்தார்கள் இங்கே? எப்படி? என்று........
Reply : 0 0
Nathan Sunday, 14 August 2011 09:12 PM
உங்கள் தொகுதியிலிருந்து எத்தனை பேர் தயார்?
Reply : 0 0
najla Sunday, 14 August 2011 09:15 PM
fsd
Reply : 0 0
அல்வையூரான் Sunday, 14 August 2011 09:20 PM
உங்கள் வீட்டார் , சகோதரிகளை பற்றியும் யோசித்து கதைக்க வேண்டும் ......
பல்லக்கு தூக்குவதற்கும் ஓர் எல்லையுண்டு ...!
Reply : 0 0
kusumbu Sunday, 14 August 2011 09:22 PM
உங்களது வீட்டில் எத்தனைப் பெண்கள் தயாராக இருக்கின்றார்கள்?
Reply : 0 0
ARM Sunday, 14 August 2011 09:35 PM
அதாவுல்லாஹ், ஹக்கீம், பஷீர், ரிஷாத், இவர்கள் எல்லாம் எங்கே உள்ளார்கள்?
Reply : 0 0
Jaydhan Sunday, 14 August 2011 06:39 PM
பெளசி அவர்களே. அப்பாவி மக்கள், ஊடகவியலாளர்கள், நாட்டிற்கு துரோகம் செய்தோர் என்றுகூறி பலரின் இரத்தங்கள் குடிக்கப்பட்டு விட்டன.
Reply : 0 0
xlntgson Sunday, 14 August 2011 10:07 PM
மனித இரத்தம் என்று அவர் எதைச் சொல்லுகிறார்?
தன் இரத்தத்தை பாலாக்கிக் கொடுப்பாள் அம்மா என்றா?
மனிதா, இரத்தம் மனித இரத்தம் மட்டும் அல்ல; மிருகங்களின் இரத்தம் கூட கிருமிகள் நிறைந்தது எளிதில் சுத்தப்படுத்த இயலாதது உலகில் அநேகமான நோய்கள் குருதி கெடுவதனால் என்று அறிந்து கொண்டால் நல்லது, மருத்துவர்கள் ஆலோசனை குருதிப் பரிசோதனையின் பின், அது அந்தக்காலம்! இப்போது திருமணம் செய்யவும் குருதிப் பரிசோதனை வேண்டும்!
எயிட்ஸ் போதாதற்கு தலசேமியா!
குருதி தானம் செய்யவும் நோய் இல்லாதவர் குருதி கிடைப்பது அரிதாகி விட்டு..
Reply : 0 0
rinsaaf Sunday, 14 August 2011 10:07 PM
உங்கள் குடும்பத்தில் இருந்து எத்தனை பெண்கள் தயார் .........?
Reply : 0 0
hari Monday, 15 August 2011 12:02 AM
சிலருக்கு எதை எங்கு அப்படி பேசவேண்டும் என தெரியாது.
Reply : 0 0
Mfareed Monday, 15 August 2011 01:14 AM
Fouzi hajeyare ninkala eppady pesukirirkal
Reply : 0 0
Birdeye Monday, 15 August 2011 02:33 AM
We have been speaking to you since long period, nothing solution found other than you closed our voice, where we can seek admit our hardship?
Reply : 0 0
bellah Monday, 15 August 2011 02:45 AM
அரசியல் இலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம்... எத்தனை பூதங்களை வேண்டுமானாலும் கட்டவிழ்த்து விடலாம்... போங்கய்யா நீங்களும் உங்க.......
Reply : 0 0
jaleel Monday, 15 August 2011 04:08 AM
நீங்கள் சொல்வது பொய் ?
Reply : 0 0
mubarak Monday, 15 August 2011 04:29 AM
இப்ப மர்ம மனிதன்தான் பிரச்சினை. அதை உடனடியாக தீருங்க.வதந்தி ? அப்பா நாட்டில் எல்லா பொது மக்களும் பொய். நீங்க மட்டும் உண்மை.?
Reply : 0 0
vasakan Monday, 15 August 2011 04:31 AM
பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வக்கில்லை, ஆனால் வக்காலத்து மட்டும் வாங்கத் தெரியும்.
எவனுக்கும் வாய் திறக்கவே சுதந்திரம் இல்லாதபோது யாருப்பா நம்ம மஹா ராசாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்றது?
Reply : 0 0
radika Monday, 15 August 2011 04:35 AM
புத்தி உள்ள மனிதர்கள் பேசும் பேச்சா இது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
51 minute ago
53 minute ago