2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அம்பாறை விவசாயிகளிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நெல் கொள்வனவு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் நெல் சந்தைப்படுத்தும் சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு கிலோ சம்பா நெல் 30 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாடு 28 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்த நிலையில், தனியார் நெல் கொள்வனவாளர்கள் மிகவும் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 66 கிலோ எடை கொண்ட ஒரு மூடை நெல்லினை அதிக பட்சமாக 1400 ரூபாவுக்கே தனியார் நெல் கொள்வனவாளர்கள் விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆயினும், இம்முறை அம்பாறை மாவட்டத்தில் நெல் உற்பத்தி அமோக விளைச்சல் கண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த போகத்தின் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் நெல் வயல்கள் அழிவடைந்தமையினை அடுத்து - விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டிருந்த அதேவேளை, நாட்டின் மொத்த நெல் உற்பத்தியிலும் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் - நெல்லுக்கான விலை இம்முறை மிகவும் கீழ் நிலையில் உள்ளமை குறித்து விவசாயிகள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7