2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொலிஸார், இராணுவத்தினர் மீது கல்முனையில் கல்வீச்சு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இன்று மாலை சாய்ந்தமருதில் வைத்து மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட இரு நபர்களை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்முனை நகரில் வைத்து கற்களால் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளையில் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாட் மற்றும் சமூகப் பெரியார்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர்களுக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றது.

பிடிக்கப்பட்ட மர்ம நபர்கள் என சந்தேகிக்கப்படுவோரில் ஒருவர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உருக்கு ஒட்டுத் தொழிற்சாலையில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றுபவர் என்றும் மற்றைய நபர் அவரை சந்திப்பதற்காக பாணமை பிரதேசத்திலிருந்து வருகை தந்த அவரின் உறவினரான கடற்படை உத்தியோகத்தர் எனவும் தெரியவந்தது.

இதனை மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிக் கூடியிருந்த மக்களுக்குத் தெளிவுபடுத்தியபோதும் அதனைப் பொருட்படுத்தாத சிலர் வன்முறையில் ஈடுபட்டதனை அடுத்து இராணுவத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து கல்முனை நகரிலுள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • meenavan Monday, 15 August 2011 11:59 AM

    கடையடைப்பும்,கல்வீச்சும்தான் ஒற்றுமையின் வெளிப்பாடோ? ஒற்றுமையை நிலை நிறுத்த வந்தவர்களே ஒன்பது கட்சிகளாக பிரிந்து அரசுடன் சங்கமித்து விட்டனர்.எதிர்வரும் மாநகர தேர்தலை களமுனையாக வைத்து சுயேட்சை குழுவொன்றின் வெற்றி மூலம் பிரிவினை இல்லை களமுனை உறுதியாக உள்ளது என நிருபியுங்கள். இதற்கு சகோதர இனத்தவரையும் இணைத்துக்கொள்ளவும். இதற்கு சகோதர நண்பர்களின் ஈமானிய விழுமியம் மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும் .

    Reply : 0       0

    Belstaff Coat Sale Wednesday, 14 March 2012 09:31 AM

    I also follow through Google Reader!

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 16 August 2011 07:26 AM

    பொதுமக்கள், பாதுகாப்பு படையனர் இத்தனையும் மீறி இந்த மர்ம மனிதர்கள் தைரியமாக ஊருக்குள் திரிவதென்றால் இவர்களுக்கு நல்ல வெளிப்பாதுகாபுண்டு என்றுதானே அர்த்தம் .தூங்குவது மாதிரி நடிப்பவனை எழுப்புவது மிக கஷ்டம் .

    Reply : 0       0

    meenavn Monday, 15 August 2011 11:20 PM

    மீனவன் பிரதேச வாதத்திக்கு அப்பால் இலங்கையன் என்ற நிலைபாட்டில் உள்ளவன். சிடிசன் (citizen )பெயருடன் மட்டும்தான் உள்ளார் இலங்கையன் எனும் நிலைக்கு வருவதற்க்கு நீண்டகாலம் எடுக்கும்.

    Reply : 0       0

    Citizen Monday, 15 August 2011 10:23 PM

    மீனவன் இன்னமும் நீங்கள் இன்னமும் பிரதேச வாதத்தை விடவில்லை.

    Reply : 0       0

    Doc - KSA Monday, 15 August 2011 09:56 PM

    Muslim intellectuals must interfere when ever needed for society. We shouldn't take any decision which may lead to damage our communal interest. Brother's. first think before taking any decisions.

    Reply : 0       0

    meenavan Monday, 15 August 2011 07:42 PM

    அப்பாடா? போலீஸ் நிலையம் தப்பியது பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லை? கிண்ணியா நிலை ஏட்படாததை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்? புகழனைத்தும் இறைவனுக்கே.

    Reply : 0       0

    sopnam Monday, 15 August 2011 05:08 PM

    மீனவனுக்கு தெரியுமோ ? தெரியாது .. சாய்ந்தமருதில் போலீஸ் நிலையம் இல்லையென்பது.

    Reply : 0       0

    nafar Monday, 15 August 2011 04:17 PM

    மீனவன் என்ன உங்களுக்கு நடந்தது பழமொழி சொல்லுவதற்காக கருத்து சொல்லுகிறிங்களா ?

    Reply : 0       0

    deenmohamed Monday, 15 August 2011 03:31 PM

    fsd

    Reply : 0       0

    aazeer Monday, 15 August 2011 01:05 PM

    நான் கல்முனையில் இருப்பவன் நான் மீனவனால் வழங்கப்பட்ட செய்தியை எதிர்கிறேன். நாம் எல்லோரும் நண்பர்கள் நாம் ஒன்றாக வாழ வேண்டும்.

    Reply : 0       0

    meenavan Monday, 15 August 2011 01:41 AM

    சாய்ந்தமருதில் மர்ம மனிதர்கள் கைது கல்முனையில் கடையடைப்பு? காலில் தேள் குத்த பனைமரத்தில் நெறி கட்டியதாம்? என்னதான் இந்த மண்ணில் நடைபெறுகிறதோ அந்த வல்ல நாயனுக்குதான் வெளிச்சம்? மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல?

    Reply : 0       0

    Zak Monday, 15 August 2011 06:55 AM

    Please try to avoid such type of nonsence comments... we all human being, no any difference between religion or place of living. Do not write your comments that will hurt someone else. Make it unity and try to live peacefull. I totaly agree with the situation happening now. But we should not punish innocent people.

    Reply : 0       0

    thahir Monday, 15 August 2011 06:32 AM

    நம்மட அமைச்சர்கள் நல்ல ரீல் விடுவாங்க.

    Reply : 0       0

    A.Riyal Monday, 15 August 2011 06:32 AM

    வதந்தி...வதந்தி... என்றால்.... தனியாக இருக்கும் பெண்களிடம் அங்கு வருபவர்கள் யார்....????????????? முதலில் அவர்களை இனம் கானுங்கள்...

    Reply : 0       0

    muneer Monday, 15 August 2011 05:06 AM

    கல்முனை + சாய்ந்தமருது இரண்டும் = களமுனைதான் நண்பா.

    Reply : 0       0

    sathik Monday, 15 August 2011 03:44 AM

    ஏன் சாய்ந்தமருதில் பிரச்சினை என்றால் கல்முனையில் கடையடைக்க கூடாதா என் சஹோதரா இதுலும் பிரிவினை எதிர்பார்க்கிறாய் இப்படியோ எமது மக்கள் ஒற்றுமை இருந்து பிரச்சினைக்கு தீர்வு கண்டால் அதுவே போதுமானது.

    Reply : 0       0

    nithas Monday, 15 August 2011 03:21 AM

    arasaangam eanna saihirathu oru natavatikka u m eatokka villaya?

    Reply : 0       0

    sabeer Monday, 15 August 2011 02:32 AM

    oruthar ponting thadi cut watcha. Neengalum y'kireenga. athey pola than ithuwum.

    Reply : 0       0

    Dilan Monday, 15 August 2011 02:32 AM

    We live peacefully now after suppressing terrorism. Please do not tarnish the good name of the government.
    In the mean time, it is also to think that all public cannot be wrong in their action. I urge the government to investigate the bottom of this grease yakka.

    Reply : 0       0

    Birdeye Monday, 15 August 2011 02:20 AM

    எது எப்படி இருந்தாலும் இதற்கு முடிவுகட்டுவது அரசின் கடமை அல்லவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8