Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடத் தீர்மானித்துள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் டாக்டர் தோமஸ் வில்லியத்தின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட 5 தமிழ்க் கிராமங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்படும் வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களையும் பெண்களையும் உள்ளடக்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
வேட்பாளர் தெரிவுக் குழுவானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான
பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், காரைதீவு பிரதேச சபைத் தலைவர் செ.ராசையா, நாவிதன்வெளி பிரதேச சபைத் தலைவர் கே.கலையரசன் உட்பட மாநகர சபை பிரிவைச் சேர்ந்த மேலும் மூவர் இடம்பெறுகின்றனர்.
தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்காதவர்களை உள்ளடக்கியதாக இக் குழு அமைந்துள்ளதென இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
49 minute ago
51 minute ago