Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்திற்கான புதிய பஸ் சேவையொன்று இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புதிய பஸ் சேவையினை அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் இன்று காலை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அஷ்ரப் நகரிலிருந்து ஒலுவிலூடாக அக்கரைப்பற்றுக்கு தினமும் இரு தடவைகள் இந்த பஸ் சேவை இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் பாடசாலை முடிவடையும் நேரத்தை கவனத்திற்கொண்டு, இந்த பஸ் சேவைகளை தினமும் இரு தடவைகள் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஷ்ரப் நகர மக்கள் தமது கிராமத்திலிருந்து சுமார் 06 கிலோமீற்றர் தூரம் பயணித்தே தமக்கான பஸ் சேவையை இதுவரை காலமும் பெற்று வந்தனர்.
இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் நபீல், இலங்கைப் போக்குவரத்துச்சபையின் கிழக்குப் பிராந்திய பிரதம முகாமையாளர் எம்.என்.எச்.எம்.நஸீர், கிழக்குப் பிராந்திய பிரதம செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம், அக்கரைப்பற்றுப் போக்குவரத்துச்சாலை முகாமையாளர் யூ.எல்.எம்.சம்சுதீன், அக்கரைப்பற்று சாலைப் பரிசோதகர் ஏ.எம்.ஏ.முபாரக் மற்றும் அஷ்ரப் நகர் கிராம உத்தியோகத்தர் எம்.சி.சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
mama Monday, 15 August 2011 10:59 PM
வாழ்த்துக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய சபையினரை பாராட்டுகிறோம் பாராட்டுகிறோம். ஆனால் ஊளல் இல்லாமல் தொடர்ந்து செல்லவும்
ஒலுவிலில் நடந்த சம்பவத்துக்கு ஒலுவில் உறுப்பினர்கள் அழைக்கப்படாமை கண்டனத்துக்குரியது.
Reply : 0 0
Munas Monday, 15 August 2011 11:04 PM
இரண்டாவது புகைப்படத்தில் மாலையுடன் பயணச் சீட்டுப் பெற்றுக் கொள்பவர் - அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் நபீல். இவர் ஒலுவிலைச் சேர்ந்தவர்தான்!
Reply : 0 0
saroo Monday, 15 August 2011 11:28 PM
ஒலுவிலில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள் முனாஸ். இது உங்களுக்குத்தெரியாதா என்ன? ஒலுவிலில் உங்க பக்கம் ஏழு உருப்பினர்களும் மற்றப்பக்கம் இரண்டு உறுப்பினர்களும் இருக்கும் விடயம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே என்ன? தப்பு பண்ண வேண்டாம் எல்லாரையும் அனுசரித்து நடக்கவும்.
Reply : 0 0
ummpa Tuesday, 16 August 2011 12:15 AM
சொந்த வாகனமா இது! விட்டுட்டு மற்றவேலையை பார்க்கவும்
Reply : 0 0
senaiyuraan Tuesday, 16 August 2011 12:19 AM
முனாஸ், தவறுகள் விடுவது மனித இயல்பு. ஆனால் அதை நியாயப்படுத்த முனைவது மிகவும் தப்பு. மத்தவர்கள் உறுப்பினர் இல்லையா அவர்களும் உங்கள் கட்சிதானே? தவிசாளர் செல்லும் இடம் எல்லாம் நீங்களும் செல்லலாம் எண்டால் அவர்கள் செல்ல முடியாதா???? அவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை மக்கள் பிரதிநிதிதான்.
Reply : 0 0
Munas Tuesday, 16 August 2011 01:39 AM
சிலவேளை, ஒலுவிலில் உள்ள மூன்று உறுப்பினர்களையும் தவிசாளர் அழைத்திருந்து - நபீல் மட்டும் வந்திருக்கலாம்!
அவர்கள் வராதமைக்கு தவிசாளரா பொறுப்பு? நல்ல பகிடி!
Reply : 0 0
பௌஸான் Tuesday, 16 August 2011 05:03 AM
எல்லாப் புகழும் இறைவனுக்கே... அல்ஹம்துலில்லாஹ்...
Reply : 0 0
hasfee Tuesday, 16 August 2011 04:03 PM
வாழ்த்துக்கள் உங்கள் சேவைகள்தொடர்ந்து செல்ல.
Reply : 0 0
senaiyuraan Wednesday, 17 August 2011 09:48 PM
அரசியலுக்கு அப்பால் அஸ்ரப் நகர் மக்களின் நீண்டநாள் தேவையை நிறைவு செய்தமைக்காக வாழ்த்துகிறேன் சேவை தொடர இறைவன் அருள் புரியட்டும் .இதைபோல் அட்டாளைச்சேனை மார்கட்டையும் ஆரம்பித்தால் சந்தோசமாக இருக்கும் மக்களின் நீண்டநாள் தேவை நிறைவேறும்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 18 August 2011 05:37 AM
தம்பி, சேனையூரான் அட்டாளைச்சேனையில் இன்று மார்க்கட் கட்டி முடித்திருக்கலாம் ஏன் கட்ட தாமதம் என்று உங்களுக்கு தெரியாதா என்ன? எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. அதனை இங்கு சொன்னால் தமிழ் மிரர் காரர்கள் பிரசுரிக்க மாட்டார்கள். இப்ப ஊருக்கு தேவை சேவை மட்டுமே. நாங்க ரெடி நீங்க ரெடியா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
52 minute ago
56 minute ago
2 hours ago