Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
மர்ம மனிதனின் நடமாட்டம் காரணமாக கல்முனை பிரதேசத்திலுள்ள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை போக்கும் வகையில் பாதுகாப்பு பிரிவினரின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்று கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இப்பிரதேசத்தில் மர்ம மனிதர்களால் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கூட்டத்தின் இறுதியில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு செயற்பாட்டுக் குழுக்களை உருவாக்குவது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மதஸ்தாபனங்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம அலுவலர்கள்;, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக குழுக்கள் கிராம அலுவலகர் பிரிவு மட்டத்தில் உருவாக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா, கல்முனை இராணுவ நிலைய பிரதிநிதி லெப்டினன் ஜயலத், கடற்படை அதிகாரி லெப்டினன் வீரசிங்க, மதஸ்தாபனங்களின் நிர்வாகத்தினர், பாடசாலை அதிபர்கள், சமூகப் பெரியார்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.
Abdul salam Tuesday, 16 August 2011 05:06 AM
எதை போட்டாலும் நல்ல படியாக செய்யப்பாருங்க விழிப்புக்குழுவுக்கு ஒரு விழிப்புக்குழு போடாவிட்டால் சரிதான்.
Reply : 0 0
IBNU ABOO Tuesday, 16 August 2011 07:13 AM
பயிரை மேயும் வேலிக்கு யார் காவல் ?
Reply : 0 0
Rizadh Rock Tuesday, 16 August 2011 07:00 PM
விழிப்பு குழுவும் விழிப்பா இருந்தால் சரி.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
47 minute ago
49 minute ago