Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொண்டவட்டுவான் பிரதேசத்தில் யானைக் காவலில் ஈடுபட்டிருந்த நான்கு விவசாயிகள் மீது இனம்தெரியாத குழுவினரினால் மேற்கொண்ட தாக்குதலில் மேற்படி நால்வரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 'குறித்த விவசாயிகள் கொண்டவட்டுவான் பள்ளிவாசலுக்கு அருகில் தமது வேளாண்மையை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக காவலில் இருந்துள்ளனர்.
அவ்வழியாக ஜீப் வண்டியில் வந்த இனந்தெரியாத குழுவினர்கள் நீங்கள் எந்த இனத்தினைச் சேர்ந்தவர்கள் எனக் கோட்டபோது நாங்கள் முஸ்லிம்கள் எனக் கூறியதும் குழுவினர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பில் அம்பாறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடத்தியதுடன், படுகாயமடைந்தவர்களை அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
meenavn Tuesday, 16 August 2011 08:28 PM
வந்தாறுமூலையில் அசீட் வீசி வர்த்தகருக்கு கத்திவெட்டு,கொண்டவட்டுவானில் இனத்தின் பெயரை கேட்டு ஜீப்பில் வந்தவர்களால் விவசாயிகள் மீது தாக்குதல்,இந்த நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கிறதா?
Reply : 0 0
samrana Wednesday, 17 August 2011 12:46 AM
சும்மாவாரவனுக்கு நீங்கள் போட்டு அடித்தால் அவன் வேறென்ன செய்வான்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
47 minute ago
49 minute ago