Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று, கோளாவில் பிரதேசத்தில் குடும்பப் பெண்ணொருவரை நேற்று திங்கட்கிழமை மாலை மர்மமனிதர்கள் தாக்கியதை அடுத்து காயமடைந்த அப்பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோளாவில், இரண்டாம் பிரிவு, குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் 20 எனபவரே மர்ம மனிதனின் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு சம்பவ தினம் மாலை 3 மணியளவில் சென்றபோது மலசலகூடத்திற்குள் ஒளிந்திருந்த இரு மர்மமனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி, வாயை செலோரேப்பினால் ஒட்டுவதை அயல் வீட்டுப் பெண்ணொருவர் கண்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தைப் பார்வையுற்ற பெண் கூச்சலிட்டதை அடுத்து மேற்படி மர்ம மனிதர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தை அடுத்து அவ்விடத்திலேயே மயக்கமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதையடுத்து கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
அத்துடன் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Yaseenbawa Hussain,Pottuvil. Wednesday, 17 August 2011 07:07 PM
மர்ம மனிதர்களால் அட்டாச் பாத் ரூம் மிக முக்கியமாப் போச்சுது! மேசன் வேலையாளர்களுக்கு தட்டுப்பாடு வந்தாலும் வரும் போல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
55 minute ago
59 minute ago
2 hours ago