2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

நெல் விற்பனைக்காக செல்லும் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் விசனம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நெல் சந்தைப்படுத்தும் சபையால் 2011ஆம் ஆண்டு சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தும் களஞ்சிய வசதியில்லை எனும் காரணத்தைக் கூறி அட்டாளைச்சேனை களஞ்சியசாலைக்கு நெல்லைக் கொண்டு செல்லும் விவசாயிகள் திருப்பியனுப்பப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி உள்ளிட்ட பிரதேசங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லினை – நெல் சந்தைப்படுத்தும் சபையினர் கொள்வனவு செய்து அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தற்போது களஞ்சியசாலையில் நெல்லை சேமிக்கக் கூடிய வசதியில்லை என்றும், களஞ்சியசாலை முழுவதும் நெல் நிரம்பி விட்டதாகவும் கூறி, நெல்லை விற்பனைக்காகக் கொண்டு வரும் விவசாயிகளை நெல் சந்தைப்படுத்தும் சபையினர் திருப்புவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால், சுமார் 120 அடி நீளமான மேற்படி அட்டாளைச்சேனை நெற் களஞ்சியசாலையில் 80 அடிப்பரப்புள்ள இடத்தில் கடந்த போகங்களில் கொள்வனவு செய்யப்பட்ட பழைய நெல் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதாகவும், களஞ்சியசாலையின் எஞ்சிய 40 அடி இடப்பரப்பிலேயே புதிய நெல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்த போகங்களில் கொள்வனவு செய்த பழைய நெல்லை ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் சபையினர் அகற்றியிருந்தால், தற்போதைய சிறுபோக நெல்லை அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த முடிந்திருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், களஞ்சிய வசதிகள் இல்லை எனும் காரணத்தைக் கூறி, நெல் சந்தைப்படுத்தும் சபையினர் விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்ய மறுப்பது எவ்வகையில் நியாயம்? என – பாதிக்கப்பட்ட விவசாயிகள் வினவுகின்றனர்.

இதேவேளை, நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு நாட்டில் போதியளவு களஞ்சிய வசதிகள் உள்ளதாக அரசாங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

களஞ்சிய வசதியில்லை எனும் காரணத்தைக் கூறி, நேற் சந்தைப்படுத்தும் சபையினர் விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு மறுத்து வருவதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி – தனியார் நெல் கொள்வனவாளர்கள் விவசாயிகளிடமிருந்து மிகவும் கீழ் மட்ட விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8