2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் வாக்குமூலம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் வீட்டிலிருந்து நான் வெளியே வந்தபோது திடீரென என் முன்னால் தோன்றிய மர்ம மனிதன் எனது கையில் கீறிய நிலையில் கூச்சலிட்டுக் கத்தினேன்  இவ்வாறு கல்முனையில் மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான நூரூல் றிஸ்வானா (வயது 19) என்ற பெண் தனக்கு நடந்த சம்பவத்தை விபரித்தார்.

நூரூல் றிஸ்வானா கல்முனை பள்ளிவீதியில் தனது குடும்பத்தவர்களுடன் வசித்து வருகிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இரவு வேளைகளில் நாங்கள் குடும்பத்தோடு சந்தோசமாக கதைவிட்டு உறங்கச் செல்வது வழமை.  அன்றையதினமும் அவ்வாறே உறங்கச் செல்வதற்கு முன்னர் நான் வெளியே வந்தேன்.  அவ்வேளையில் திடீரென என் முன்னால் தோன்றிய மர்ம மனிதன் எனது கையில் கீறிய நிலையில்  நான் சத்தமிட்டுக் கத்தினேன். அப்போது வீட்டிலிருந்தவர்கள் வெளியே ஓடி வர அம்மர்மனிதன் ஓடி விட்டான்.

அம்மர்ம மனிதனின் முகம் கறுப்பாக இருந்ததுடன் கண் மட்டுமே தெளிவாக விளங்கியது. அவன் அணிந்திருந்த ஆடையும் கறுப்பாக இருந்தது.  கூச்சல் சத்தத்தைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த அயலவர்கள் அம்மர்ம மனிதனை தேடியபோதும் அவன் அகப்படவில்லை' என்றார்.

மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான இப்பெண்  தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக அவ்வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரிடம் தெரிவிக்கையில்,

'இது மர்மமாக உள்ளது. நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்ன மர்மம்  என்று புரியவில்லை. எங்களது  வைத்தியசாலையில் ஐந்து பேர் மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 17 August 2011 05:04 PM

    ஈமானிய சகோதரியே? உனக்கு இப்படி ஒரு சோதனை ?

    Reply : 0       0

    A.L.M.Rizlan Wednesday, 17 August 2011 06:55 PM

    kudumbaththudan serenthu kathaippathumma thavaru?

    Reply : 0       0

    nawas Thursday, 18 August 2011 06:50 AM

    யா அல்லா நீதான் இந்த மர்ம நரிகளை ஒழிக்க வேண்டும்,உன்னால் மட்டுமே அது நடக்கும்,பொலிசாரும் அரசாங்கமும் தயிர் சட்டிக்கு பூனையை காவலுக்கு வைத்த கதைதான்.

    Reply : 0       0

    sakeena. Thursday, 18 August 2011 10:41 AM

    இதெல்லாம் அரசாங்கம் நம்ப maruppathen...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8