Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
'மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் என்ற வதந்திகளைப் பரப்பிக்கொண்டு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சில தீயசக்திகள் செயற்பட்டு வருகின்றனர். எனவே சிவில் பாதுகாப்புக் குழுவினராகிய பொதுமக்களின் பிரதிநிதிகளான உங்களுடன் இணைந்து இந்தப் பிரச்சினையை தீர்க்க உள்ளோம்'
- இவ்வாறு, கல்முனை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம். சதாத் இன்று மாலை கல்முனை பிரதேச மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்திலே இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் மக்களின் பாதுகாப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட நாங்கள் மக்களின் பாதுகாப்புக்காக ஒன்றினைந்து செயற்படுத்துவதனூடாக மக்களுக்கு போதிய மன தைரியத்தையும், பாதுகாப்பையும் வழங்க முடியும்.
மர்மமனிதர்கள் என்று யாரையாவது நீங்கள் உறுதிப்படுத்தினால் நீங்கள் அவரை எவ்வாறாயினும் பிடிக்க முடியும். ஆனால் அப்பாவிகளை அவ்வாறு செய்யாதீர்கள். நாங்களும், நீங்களும் இணைந்து கிராமந்தோறும் வீதி நகர்வு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனூடாக இப்பதற்றத்தை தவிர்க்க முடியும் எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் கிராமந்தோறும், வீதி நகர்வுப் பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களையும் இணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
53 minute ago
55 minute ago