Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
மர்ம மனிதர்கள் குறித்து எந்தவொரு உண்மையான நிலைப்பாட்டையும் அறிய முடியவில்லை. அவ்வாறு தற்போது நடைபெறுவதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையாக இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளுவோம் என கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மென்டீஸ் தெரிவித்துள்ளார்.
துறைநீலாவனை விபுலானந்தா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற அக்கிராம மக்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹாவத்தையில் முதன் முதலில் ஆரம்பமானது. இது தற்போது இங்கும் பரவியுள்ளது. அங்கு மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இங்கு மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எது எவ்வாறாக இருந்தபோதிலும் இனிமேலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இடம்பெறாது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம். மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார்.
இந்தக் கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத்இ மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.நபீல் இ துறைநீலாவனை பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி எஸ்.ரி.ஆரியரத்ன, கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
சிறாஜ் Friday, 19 August 2011 09:12 PM
என்னதான் சரியாக அறிய முடியும்? அதனை சரியாக செய்யுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
48 minute ago
50 minute ago