Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 9 பேரையும் விசாரணையின் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் 3 மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்தபோது பொலிஸார் அவர்களை மீட்டு கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து, பொதுமக்கள் வீதிகளில் ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி இவர்கள் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்வர்கள் விசாரணையின் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி விடுதலை செய்ததாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரியா தெரிவித்தார்.
இச்சம்பவங்களில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம், சந்திரகுமார் உட்பட 9 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
50 minute ago
54 minute ago
2 hours ago