Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நேர்மூக பரீட்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவீகள் மற்றும் இளைஞர்கள் என பலர் இந்நேர்முக பரீட்சையில் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எஞ்சியுள்ள 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் கட்சியின் உயர் பீடம் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By:Kushan Pathiraja
haneek Thursday, 18 August 2011 09:08 PM
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே சிறந்த ஒருவரை மேயராக தெரிவு செய்யுங்கள்?
Reply : 0 0
Ahamed Thursday, 18 August 2011 10:58 PM
இப்படித்தான் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலுக்கான நேர்முகப் பரீட்சைகளையும் இங்குள்ள எம்.பி. மற்றும் தும்பி மார் அனைவரும் சேர்ந்து - ராவு பகலாக நடத்தினார்கள்!
கடைசியில் தலைவர் ஹக்கீம் வந்து - இரவோடு இரவாக வோறொரு நேர்முகப் பரீட்சை நடத்தினாரு!
இங்கும் - அதுதான் நடக்கும்! இருந்து பாருங்கள் ராசா!!
Reply : 0 0
kalam Friday, 19 August 2011 01:29 AM
தலைவரே... பாவம் கல்முனை மாநகரம் ..... பார்த்து பரீட்சை நடத்துங்கள்.....
Reply : 0 0
UK Friday, 19 August 2011 01:45 AM
யார்ர தலையில எழுதியிருக்கோ .அவன் செயல்.
Reply : 0 0
sifan Friday, 19 August 2011 02:19 AM
நேர்முகப் பரீட்சை நடத்துகின்ற எம்பி ஹரீஸ் சூப்பர் . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சூப்பரோ சூப்பர் கல்முனை மா நகரம் கோவிந்த ...... கோவிந்த .......
Reply : 0 0
nafeel.saad Friday, 19 August 2011 03:30 AM
மக்கள் மத்தியில் பழகியவர்களையும் படித்த பண்பானவர்களையும் தெரிவு செய்யவும்.
Reply : 0 0
oor kuruvi Friday, 19 August 2011 05:40 PM
எப்பதான் கல்முனையிண்ட தலையெழுத்து மாறுமோ அல்லா தான் அறிவான்
Reply : 0 0
raseen Friday, 19 August 2011 06:06 PM
fsf
Reply : 0 0
kalmunai uuraan Monday, 22 August 2011 06:16 PM
இவங்க எல்லாம் யார் ???
இதற்குமுன் அரசியலில் என்ன கிளித்தார்கள்?.. பாவம் கல்முனை மக்கள். அந்த இறைவன்தான் கல்முனை மக்களை பாத்து காக்கணும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
46 minute ago
48 minute ago