Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
பொய்யான பிரசாரங்களினூடாக பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்குதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குரிய சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர வேண்டுகோளொன்றினை விடுத்துள்ளார்.
'கிறீஸ் மனிதன் தொடர்பில் வதந்திகனைப் பரப்புதல்' எனும் தலைப்பிடப்பட்டு அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு அரசாங்க அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுளூ
நாட்டின் சகல பிரதேசங்களிலும் பல்வேறு வழிகளில் வதந்திகள் பரவிக் கொண்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்திலும், பதட்டமடைந்த நிலையிலுள்ளனர்.
சில இடங்களில், பிரதேச செயலகங்களிலே கடமையாற்றுகின்ற சில உத்தியோகத்தர்களாலும், ஊழியர்களினாலும் இவ்விதமான பொய் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக எனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இவ்வாறு பொய் வதந்திகளைப் பரப்புவதானது மிகவும் பாரதூரமான குற்றச்செயலாகும். மேலும், சட்டத்தின் பிரகாரம் இது தண்டிக்கக் கூடியதொரு குற்றமுமாகும்.
இனியும், பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்றவர்களால் பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கும் வகையிலான பொய் வதந்திகள் பரப்பப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்குமாயின், குறித்த நபர்களுக்கெதிராக விசாரணை நடாத்தப்படுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனையினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
46 minute ago
48 minute ago