2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

'மர்ம மனிதன் சம்பவங்களின் மூலம் அரசாங்கத்துக்கும் படையினருக்கும் அவதூறு ஏற்படுத்த முயற்சி'

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அரசாங்கத்துக்கும் பொலிஸார், இராணுவத்தினருக்கும் அவதூறுகளை ஏற்படுத்தவும் மக்களை அசாதாரண சூழ்நிலையில் வைக்கவேண்டும் என்பதற்காகவும் சர்வதேசத்தில் இருக்கின்ற குழு ஒன்றின் பின்னணியில் நாசகாரகுழு ஒன்று மர்மமனிதன் செயற்பாட்டில் ஈடுப்பட்டுவருகின்றது என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.ஆர்.முகமட் தெரிவித்தார்.

 

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மர்மமனிதன் தொடர்பான சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிப்பதும் அவற்றுக்கான தீர்வு காணுவதும் தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலக பிரதம கணக்காய்வாளர் கனகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடரந்தும் உரையாற்றிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

இச்சம்பவங்களின் பின்னின்று பொலிஸார் மீது தாக்குபவர்கள் கஞ்சாவிற்பவர்களும், சாராயம் விற்பவர்களும், கொள்ளை, களவு போன்ற பல சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாசகார சக்திகளுடன் சேர்ந்து
மக்களுக்கிடையில் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றனர்.  எனவே மக்கள் மத்தியில் உள்ள பயத்தை இல்லாது செய்யவேண்டும். இதற்காக பாதுகாப்பு தரப்பினருக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீதிகளில் தடைகள் மற்றும் ரயர் எரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர்கள்; இணைந்து பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான யோசனையை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்த போதும் எவரும் கருத்து தெரிவிக்காததையடுத்து தீர்மானம் ஒன்றும் எடுக்கப்படாது கூட்டம் முடிவிற்றுள்ளது.

இக்கூட்டத்தில்  பொத்துவில் செங்காமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி பிரசாந், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல், நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன, பொலிஸார், மதத்தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் விழிப்பு குழுக்கள், கிராம சேவகர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0

  • Rizadh Rock Saturday, 20 August 2011 08:25 PM

    குட்ட குட்ட குனிபவனும் மடயன், குட்டுபவனும் மடயன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8