2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பெண்ணை கத்தியால் வெட்டிய நபர் கைது

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பெண்ணொருவரை கத்தியால் வெட்டிய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நபரின் கத்தி வெட்டில் படுகாயமடைந்த பெண் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக
சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
கத்தி வெட்டுக்கு இலக்கான பெண்ணும் கத்தி வெட்டு மேற்கொண்ட நபரும் விநாயகபுரம் சின்னத்தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கத்தி வெட்டுக்கு இலக்கான பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற பொதுமக்கள்  மர்ம மனிதன் அப்பெண்ணை தாக்கியுள்ளதாக நினைத்து  கத்தி வெட்டு மேற்கொண்ட நபரைப்  பிடித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Friday, 19 August 2011 09:06 PM

    இப்படித்தான் எல்லாமே. மர்ம மனிதன் இப்படி உள்ளுக்குள் இருப்பான் நல்லா தேடிப்பிடிங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8