Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருதில் வீடொன்றின் கூரைக்கு மேல் சந்தேகத்திற்கிடமாக நடமாடிக்கொண்டிருந்தவரை பிடிப்பதற்காக சென்ற வீட்டுரிமையாளர் குறித்த மனிதரால் தாக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது- 03 பழைய சந்தை வீதியில் வசிக்கும் எச்.பாறுக் (வயது-42) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கபட்டவர் தெரிவிக்கையில்,
நான் வீட்டிற்கு வரும் போது எனது வீட்டின் கூரையின் மேல் ஒருவர் நடமாடுவதைக் கண்டேன். பின்னர் சத்தம் போடாது கூரையின் மேல் ஏறி சந்தேகத்திற்கிடமான அம் மனிதனை தாவிப்பிடித்தேன். அப்போது அவன் எனது இடது கையில் கீறி விட்டும் வலது கையில் வெட்டி விட்டும் பாய்ந்து சென்றான். அவனை தாவிப் பிடிக்க முட்பட்ட வேளையில் எனது கால் அடிப்பட்டு விட்டது என்று கூறினார்.
அவன் மெல்லிய தோற்றம் கொண்டவனாகவும் ஒட்டிய நைலோன் ஆடை அணிந்திந்ததனால் அவனை பிடிக்கும்போது வழுக்கியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,
நானும் எனது உம்மாவும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்த போது இரவு 9.30 மணியளவில் எங்களுடைய வீட்டின் கூரையில் யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்டது. பின்னர் கல் எறிவது போன்றும் இருந்தது. பயத்தில் கதவை பூட்டிக்கொண்டு தொலைபேசி மூலம் நடந்த விடயத்தை என் கணவருக்கு அறிவித்தேன். சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த எனது கணவர் சத்தம் போட வேண்டாம் எனக் கூறி கூரையின் மேல் ஏறினார். பின்னர் கூரைக்கு மேல் சண்டை பிடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அதன் பின்னர் கணவரின் கைகளிலும் காலிலும் காயங்கள் இருப்பதைக் கண்டேன் என்றார்.
மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் நேற்று நள்ளிரவு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
yas Friday, 19 August 2011 07:30 PM
எதயும் பிளான் பண்ணனும். தனியே சென்றால் அவனை மடக்குவது கஷ்டம்.
Reply : 0 0
nalanverumpea Saturday, 20 August 2011 04:40 PM
kodiya payankara waatheakalai aleaththoleththa arasankattukku intha geasse manetharkalai ean pedikka mudiyatu asadayaka irukeandarkal?..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
48 minute ago
50 minute ago