2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

'வறுமையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட கூடாது'

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
'வறுமையின் காரணமாக மாணவர்கள் தமது பாடசாலை கல்வி நடவடிக்கைகளை எந்த விதத்திலும் இடை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இவ்வாறான கற்றல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஏனைய அமைப்புக்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றோம்' என கல்முனைப் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம் தௌபீக் தெரிவித்தார்.

'யுனிசெப்' அமைப்பின் நிதி உதவியுடனும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடனும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மற்றும் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட 40 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்ற வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் எம்.ஐ.எம் தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் பி.எம்.எம்.ஜிப்ரி, கல்முனைப் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சரீபா சாஜகான் ஆகியோர் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7