Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பிரதேசத்தில் கடமையிலுள்ள இராணுவத்தினர் உடனடியாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கையை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் திலக் விஜயகுணவர்த்தன ஏற்றுக்கொண்டார்.
கல்முனை பிரதேசத்தில் அண்மையில் நிலவிய மர்ம மனிதர்களின் விவகாரம் தொடர்பில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கல்முனை (தமிழ் பிரிவு), சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம் பிரிவு) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் கீழுள்ள விழிப்புணர்வுக்குழு அங்கத்தவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே மக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டாக்டர் ரீ.நவரெட்ணராஜா, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா, கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு புலனாய்வு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத், அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Rizadh Rock Tuesday, 23 August 2011 09:58 PM
எந்த படையா இருந்தாலும் மக்களுக்கு நல்லது பண்ணினா போற்றப்படுவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
52 minute ago
54 minute ago