2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

காரைதீவு, திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் பதவியேற்பு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிய இரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

காரைதீவு மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்கள் இதன்போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

திருக்கோவில் பிரதேச சபைக்கான உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு அதன் தவிசாளர்  விவேகானந்தராசா புனிதராஜ் தலைமையிலும், காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வு அதன் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட செல்லையா இராசையாவின்
தலைமையிலும் இடம்பெற்றது.

இதன்போது திருக்கோவில் பிரதேச சபையில் 7 உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச சபையில் 5பேரும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, திருக்கோவில் பிரதேச செயலாளரும் விசேட ஆணையாளருமான அழகரெட்னம், காரைதீவு பிரதேச செயலாளரும் விசேட ஆணையாளருமான இராமகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7