Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகரசபை எல்லைக்குள் மனிதநேயமான ஆட்சியை மேற்கொள்வதையே நான் விரும்புகின்றேன் என கல்முனை மாநகரசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர மேயராக தான் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் மனிதநேயமான ஆட்சிமுறையையே நான் கடைப்பிடிப்பேன். மக்களுடன் இணைந்தே எனது சேவையினை முன்னெடுப்பேன். கல்முனை மாநகரசபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்று மேயராக தெரிவு செய்யப்படுவதையே நான் விரும்புகின்றேன். இருப்பினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தினால் மேயராக நியமிக்கப்படுவதை ஒருபோதும் நான் அங்கீகரிக்கமாட்டேன்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவை பேணுவதில் சிறந்த உள்ளூராட்சிமன்றமாக கல்முனை மாநகர சபையினை மாற்றுவேன். மாநகரசபைத் நான் தோல்வியடையும் நிலைமை ஏற்படுமாகவிருந்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என்றார்.
vaasahan Sunday, 04 September 2011 09:55 PM
கல்முனை எம் எஸ் காரியப்பர் முதல் அஷ்ரப் வரை ஆச்சரியப்படத்தக்க ராஜதந்திரிகள் ஆட்சி செய்த பிராந்தியம். அப்படி ஒரு இராஜதந்திர மற்றும் அறிவு பூர்வமான ஒரு தலைமையை மாநகருக்கு வழங்கும் நோக்கிலேயே நிஜாம் பிரேரிக்கப்பட்டுள்ளார். கல்முனை மாநகர மக்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தேர்தல்களில் கொடுத்ததே இல்லை. அந்த வரலாற்றை அவர்கள் ஒருநாளும் பொய்ப்பிக்கவே மாட்டார்கள். பின்னர் நிஜாமுக்கு மிகவும் பொருத்தமான கௌரவம் வழங்கப்படும்போது மற்ற ஊர்களின் தலைமைய்களுக்கு மேயர் அதிகாரம் வழங்கப்படுவது சாலவும் பொருத்தம்.
Reply : 0 0
askan Thursday, 15 September 2011 08:39 PM
மஜீத் காக்காவே பொருத்தமானவர்.
Reply : 0 0
maatram Thursday, 15 September 2011 08:37 PM
நிசாமுக்கு உள்ள தொடர்பாடல் தெரியாமத்தான் இருக்கு பக்கத்துக்கு வீட்டுக்காரண்ட
பெயர் கூட சரியாய் தெரியாது..
Reply : 0 0
siraj Sunday, 11 September 2011 04:14 AM
நிஜம்தான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நிசாம் வெற்றி பெறவேண்டுமானால் சாய்ந்தமருது மருதமுனை மக்கள் வாக்களிக்கனும். ஆனால் மருதமுனையில் சட்டத்தரணி றக்கீப்புக்குதான் எல்லா வாக்குகளும் என்று ஒரே பிடியில் அந்த மக்கள்
சாய்ந்த மருதை எடுத்தால் சொப்பரில் வரும் சிராஸ் என்றும் மற்றது முக்கியமான ஒருத்தர் முழக்கம் மஜீட் அவர் கடந்த இணைந்த வடகிழக்கில் 1982ம் ஆண்டு என்று நினைக்கிறேன் மாகான சபை உறுப்பினரா இருந்தவர் அப்படி இவர்கள் இருக்கும் போது நிசாம் மட்டும்தான் வெல்லனும் என்று சொல்வது நியாயமா?
Reply : 0 0
rizard Sunday, 11 September 2011 01:21 AM
சிறாஜ், தற்பொது கல்முனை மா நகர சபைக்காக கேட்கும் வேட்பாளர்களில் யாராவது செயல் வீரர் உள்ளனரா? அந்த வகையில் பார்க்கும் போது சிறந்த தொடர்பாடல் திறனுள்ள வேட்பாளர் நிசாம் காரியப்பரே. இதனை உணர வேண்டும்.
Reply : 0 0
siraj Friday, 09 September 2011 08:43 PM
நுஸ்கி, ரிசாட் நீங்கள் இருவருக்கும் நான் சொல்வது என்ன வென்றால் கல்முனைக்கு படித்தவன், வேண்டும் படித்தவன் வேண்டும் என்று சொல்கிறீர்கள். யாருப்பா படிக்கவில்லை. உங்கட முதல் மேயரும் ஒரு சட்டத்தரணிதானே அவர் என்ன செய்துள்ளார்.
நிசாம் தேர்தலில் கேட்டிருக்க கூடாது என்றுதான் நான் சொல்கிறேன். அவரின் கொள்கையில் அவர் இருந்திரிக்க வேண்டும். இப்ப தேர்தலில் இவர் வெற்றியடையா விட்டால் இங்கு வாய் கிழிய கத்தும் சிலர் என்ன சொல்ல இருக்கினம் என்பதனை யோசியுங்கள். எல்லாம் ஊருக்கு என்று பார்க்காம எல்லா பக்கமும் விடனும்.
Reply : 0 0
Rizard Friday, 09 September 2011 06:56 PM
சிராஜ் போன்றவர்கள் கதைப்பதில் எந்த யதார்த்தமான கருத்துகளும் இல்லை. கல்முனை மா நகர சபைக்கு இப்போதாவது ஒரு சிறந்த நிதானமான கல்விமான் மேயராக வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. இதனை நாம் பிரதேசவாதம், பொறாமை, சுயநலம் என்பவற்றை நம்மிடமிருந்து ஒதுக்கி எதிர்கால கல்முனை மா நகரத்தின் நன்மை கருதி நிசாம் காரியப்பரை மேயராக்குவோம். தவறினால் கல்முனை மாநகர மக்களை பார்த்து உலகம் காறித்துப்பும்.
Reply : 0 0
Nusky Friday, 09 September 2011 01:13 AM
Siraj, உங்களின் கருத்தில் Logic இல்லையே...! கல்முனைக்கு தலைவராக முடியாத அல்லது தகுதி இல்லாத Nizam Kariyapper எப்படி எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ்கு தலைவராக முடியும்...?? இவர் இந்த தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்குகள் எடுக்க தவறும் பட்சத்தில் கட்சிக்குள் இருந்து ஓரம் கட்டப்படுவார். மக்களின் அங்கீகாரம் பெறாதவர் என்றும் வார்நிக்கப்படுவார்.. Siraj, தூர நோக்கோடும் கட்சியை பாதுகாக்கும் என்னதொடும் அரசியல் அணுகுமுறைதான் ஆரோக்கியமானது.
Reply : 0 0
siraj Thursday, 08 September 2011 05:00 AM
மீனவன் போய் மீன் பிடிக்கும் வேலையை பாரு. நாங்கள் இங்கு அரசியல் பேசுறோம். நான் சொன்னேன் நிசாம் காரியப்பர் ஒரு சிறந்த மனிதர் அவருக்கும் மேயருக்கும் தூரம். அவருக்கு சரியான பதவிதான் முஸ்லீம் காங்கிரசின் அடுத்த தலைமத்துவம். ஏன்னா ரவூப் ஹக்கீமுக்கு பிறகு கட்சிக்கு சிறந்த தலை நிசாம் என்பதில் தவறேதும் இல்லை. எனவே மேயராகும் தகுதி முழக்கம் மஜீத்துக்கு இருக்கு. அவர் நல்ல மனிதர் மட்டுமன்றி மக்களை சரியான வளியில் கொண்டு செலவார்.
Reply : 0 0
Mahaan Tuesday, 06 September 2011 10:14 AM
As a well wisher of kalmunai, my humble request to the people. please caste your vote to Mr Nizzam Kariapper and make him a Mayer of Kalmunai. because he is the right candidate for the Mayer as compare to others.
May Allah bless Kalmunai.
I would like to wish Mr Kariaper in advance for his success.
Reply : 0 0
Maha SMT Monday, 05 September 2011 06:17 PM
நிச்சயமாக.... முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட இடம் எமது பிரதேசம் ... இன்று யார் யாரெல்லாம் அதற்கு உரிமை கோருகிறார்கள் ....மீண்டும் எமது கட்சி எமது பிரதேசத்தை சேர்ந்தவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் அமைய வேண்டும் அதற்காக பாடுபடுவோம் ஒன்றினைவோம் - அல்லாஹு அக்பர் -
Reply : 0 0
ummpa Monday, 05 September 2011 02:25 PM
Rozan ,தம்பிக்கு புரியாது சரித்திரம். எனவே முதல் அவர் Do your home work and come to comment .
Reply : 0 0
Nusky Monday, 05 September 2011 04:14 AM
நண்பனே! ஊர் வாதம் பேசி நல்ல ஒரு தலைவரை சிறந்த முற்போக்கு வாதியை நல்ல ஒரு நிருவாகியை அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிடாதீர்கள்... ரோட்டில் tyre எரித்து சோடா போத்தல் உடைத்து அரசியல் சையும் கலாசாரத்தை கைவிட்டு தூரநோக்கோடு புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்க துணை நிற்போம். "ஒரு கசப்பான உண்மை - Nizam Kariyepper இந்த பிரதேசதில் வாழும் எந்த அரசியல் வாதிகளுக்கும் சவாலானவர் அல்ல, மாறாக அவர் Rouf Hakeem இக்கு சவாலானவர்". எனவே பிரதேச வாதம் பேசி நல்ல தலைமைத்துவத்தை இழந்து சாப வலைக்குள் மாடிக் கொள்ளுவதை எதிர்போம்.
Reply : 0 0
Nusky Monday, 05 September 2011 03:01 AM
இந்த முறை தேர்தலில் போட்டி இடும் அத்தணை வேட்பாளர்களையும் விட நிசாம் காரியப்பர் தகுதியானவர். அவரை மேயர் ஆக்குவதுதான் கல்முனைக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும். 'அவர்களின் இரத்தம் நீண்ட வரலாறு கொண்டது' என்பதற்கு ஏகப்பட்ட வரலாற்று சாற்றுகள் கிழக்கு மண்ணில் உள்ளது. இதனை ஒவ்வொன்றாக சொல்ல முடியாது.... 1000 பக்கங்கள் கொண்ட புத்தகமே எழுதலாம்... rozan , தேர்தல் பிரசாரங்களுக்காக முழுப் பூசணிகாவை சோற்றுக்குள் மறைக்க முயலவேண்டாம்... 'தமது வரலாறு தெரியாத சமமூகம் காலப்போக்கில் முகவரியை இழந்துவிடும்'
Reply : 0 0
pasha Sunday, 04 September 2011 10:38 PM
இவரை மேயர் பதவிக்கு நியமிப்பது சாய்ந்தமருது மக்களை கட்சி தொடர்ந்து புறக்கணிப்பதை காட்டுகின்றது. சாய்ந்தமருது மக்களுக்கு உள்ள ஒரே தீர்வு கல்முனை இல் இருந்து பிரிந்து தனி சபை அமைப்பது தான். சாய்ந்தமருது மக்கள் புத்திசாலிகள் என்றால் தொடர்ந்து புறக்கணிக்கும் கட்சியை கைவிட்டு தங்களது குறைகளை தீர்க்கும் கட்சியை ஆதரிப்பது தான்.
Reply : 0 0
rizadh Kalmunai Friday, 02 September 2011 03:46 PM
அதென்ன தோல்வி அடையும் நிலைமை வந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவது ? ? ? இதற்கு முன்னர் நீங்கள் அரசியலில் இருந்த காலங்களில் என்ன பொது சேவை ஆற்றி உள்ளீர்கள் ? ? ?
Reply : 0 0
meenavan Sunday, 04 September 2011 04:16 AM
சிராஜ், ஊரில் ப்ரீயாக இருப்பவர்களுக்கு தான் மேயர் வேலை பொருத்தம் என்றால்,அரசாங்க சேவையில் நிர்வாகம் செய்து ஒய்வு பெற்ற பலர் நமதூரில் உள்ளனர். அவர்களிளில் ஒருவரை அபேட்சகராக நியமித்து முயற்சி செய்திருக்கலாமே? கல்முனைக்கு மேயராக வருபவர் சோடா போத்தல் போன்று இருந்தால் போதுமென சிராஜ் விரும்புகிறாரோ?
Reply : 0 0
rozan Sunday, 04 September 2011 03:47 AM
உம்பா, அங்க ஒரு நீண்ட வரலாறும் இல்லை...சும்மா உசிபேத்தாதிங்க ....ஏதாவது வரலாறு தெரிஞ்சா சொல்லுங்க, பதில் தருவோம் ......
Reply : 0 0
jaleel kwt Sunday, 04 September 2011 02:11 AM
இது எல்லாம் ஒரு கண் துடைப்பு.
Reply : 0 0
rifthiali Sunday, 04 September 2011 01:12 AM
immurai slmc il election ketpavargal ellarum nizamidam niraya katka venni ullathu........enave vaaipai thawaramal avarai amoha vakkugalal vettri pera seivom.......puthiya nizam kariyappar sathippar........
Reply : 0 0
ummpa Saturday, 03 September 2011 09:15 PM
இந்த நிசாம் அவர்களின் இரத்தம் நீண்ட வரலாறு கொண்டது. நமது நாட்டுக்கும் மாவட்டத்துக்கும் எனவே இவர் என்ன ? என்று கேட்டுக்கொண்டு இருக்காமல் அவருக்கு உங்கள் வாக்கை கொடுத்து பாருங்கள் . இதுதான் நாம் இரண்டு ஊருக்கும் செய்கின்ற பணி!
Reply : 0 0
naseem Saturday, 03 September 2011 08:12 PM
Advanced congratulations to become Hon. Mayor of KMC. And I welcome transparency, accountable good governance rather than humanitarian governance.
Best wishes.
Reply : 0 0
sahan Saturday, 03 September 2011 07:44 PM
slmc yaiyum marathaiyum valarkka arivu rithiyaka padupattavar mr nizam. Athumattu mallamal katchikku ethirana valakkukalukku mukam koduthdu katchiyai kappatriyavar...... slmc yaipatri pesupavarkalukku ethu theriyuma? evarudaya sewaiku nikaraka arivu rirthiyaka seyatpattavarkal yarum kidayathu slmc il. kalmunai mc ikku ivarthan siranthava.r all the best mr nizam...... allah help u .........allways insha allah makkal aanai immurai kidaikum .......
Reply : 0 0
rozan Saturday, 03 September 2011 09:15 AM
இவர் வெளிவிடும் அறிக்கை மஜீத்தை அதிகபட்ச வாக்குகளால் வெற்றி பெறச்செய்வதற்கும் அதே போன்று மற்றவர்கள் மேயர் பதவிக்கு போட்டி போடுவதக்கும் தெம்பு தருகிறது.
Reply : 0 0
roomy Saturday, 03 September 2011 09:05 AM
வீடியோ இருந்தால், வெளி விடுங்கள்.
Reply : 0 0
siraj Saturday, 03 September 2011 06:25 AM
நிசாம் காரியப்பர் ஒரு சிறந்த சட்டத்தரணி.
உங்கள் பணியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால். நீங்கள் கட்சிக்கு அடுத்த தலைமத்துவத்துக்கு சிறந்தவர். ஆனால் மேயராக வர விரும்பும் செயல் என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஏன் என்றால் அதுக்கு ஊரில் பிறியா இருப்பவர்கள்தான் ஊரின் நிலமையை கண்டு அதற்க்கான வேலையை செய்வார்கள். உங்களின் அவசர வேலை கொழும்பில் வழக்கு. அங்கு இங்கு இது சாத்தியமா? ஊரைப் பார்க்கலாமா? மக்களைப் பார்கலாமா
எனவே முழக்கம் மஜீத்துக்கு இடத்தைக்கொடுத்து உதவி செய்யுங்கள் நிசாம் சார்.
Reply : 0 0
Maaim Saturday, 03 September 2011 04:21 AM
Hope Mr. Nisam will develop the abandoned Sainthamaruthu if he elected as mayor.
Reply : 0 0
birdeye Saturday, 03 September 2011 02:13 AM
All the best for your victory, Kalmunai MC seeks a balanced view leaders, they can only keep the better relationship among both communities... unlike in the past..
Reply : 0 0
meenavan Friday, 02 September 2011 08:40 PM
நிசாம் நீங்கள் கூறும் மனித நேய ஆட்சி கேட்பதற்கு நன்றாக உள்ளது. முதலில் வெற்றியை நிலைநாட்டுங்கள், எம்.பி.இனது ஒத்துழைப்பு உங்களுக்கு சார்பாக இருக்குமென்பது சந்தேகமே? அடிக்கடி தாளம் மாற்றும் தலைவரின் செயல்பாடுகளையும் அவதானத்தில் எடுக்கவும்.
Reply : 0 0
rakkish Friday, 02 September 2011 05:16 PM
உங்கள் அரசியல் பயணம் நீண்டது, இருந்தும் கட்சியின் பாதை மாறும் போதும் உங்கள் அமைதி??? பிரதேச அசாதாரண நிலைமைகளில் உங்கள் குரல்?? சிந்திக்க வைக்கிறது.. மக்கள் தீர்மானிக்கட்டும் உங்கள் முடிவுகளை.. தலைவர் மகிந்தரின் மடியில் இருந்து தீர்மானிப்பார் உங்கள் சேவைகளை...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago