Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
ஒலுவில் கடற்கரையினை அண்மித்துள்ள பெருமளவான காணிகள் தினமும் கடலரிப்புக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதும், இதுவரை கடலரிப்பினை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஒலுவில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில்ளூ
'எனது காணியில் சுமார் 200 மீற்றர் அளவான நிலத்தினை கடல் விழுங்கியுள்ளது. என்னுடைய வளவினுள் இருந்த கிணறு ஒன்று இப்போது கடலினுள் இருப்பதை நீங்கள் காணலாம்.
இவை தவிர, என்னுடைய வளவினுள் இருந்த பல தென்னை மரங்கள் கடல் அரிப்பின் காரணமாக வீழ்ந்து விட்டன. இந்த மரங்களில் இருந்து கிடைத்து வந்த தேங்காய்களை விற்பனை செய்வதன் மூலம் எனக்கு நல்லதொரு வருமானம் கிடைத்து வந்தது. இப்போது அதையும் நான் இழந்து விட்டேன்' என்றார்.
இதேவேளை, இக் கடலரிப்பின் காரணமாக - இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர்களின் ஏராளமான வாடிகளும் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கடலரிப்பினைத் தடுக்குமாறு ஜனாதிபதிக்கு ஒலுவில் பிரதேச மக்கள் எழுத்து மூலமாக வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தனர்.
இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு – கடந்த 2009 ஆம் ஆண்டளவில் உத்தரவிட்டிருந்த போதும், பிரதேச செயலாளர் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் ஒருவர் கவலை தெரிவித்தார்.
Thariq Niyas Wednesday, 07 September 2011 08:38 PM
மக்களே நீங்க நினைத்தால்.... முடியாதது ஒன்றுமில்லை... முற்றுகை இடுங்கள்... சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வீட்டை...... அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.... இங்கே வாழப் போவது உங்களது சந்ததியும்தான்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
57 minute ago
1 hours ago