Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 10 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கொழும்பு – 03 பம்பலப்பிட்டி நிமல் வீதி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை ரயிலில் மோதிய கல்முனையை சேர்ந்த நபர் இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கையடக்க தொலைபேசியில் உரையாடிய வண்ணம் பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்துகொண்டு சென்ற போதே இவர் ரயில் மோதியுள்ளார்.
இதனையடுத்து பல காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையின் அவரச சிகிச்சை பிரிவில் சுய நினைவின்றி அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நாற்பது வயதான துறைமுக அதிகார சபை முன்னால் ஊத்தியோகத்தரான எம்.ஐ.றியாத் என்பவரே உயிரிழந்தவராவார்.
பிரேத பரிசோதனையையடுத்து உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கல்முனையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி மற்றும் களுபோவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
siraj Sunday, 11 September 2011 03:51 AM
பாவம் கவனம் எல்லாருக்கும் எல்லாத்திலும் தேவை.
Reply : 0 0
Nusky Sunday, 11 September 2011 04:41 AM
இன்னாளிலைகி வஇன்னாகி றாஜுஹுன்... இவர் கல்முனையில் நன்கு அறியப் பட்டவர்.. அல்லாஹ் இவரை பொருந்திக் கொள்வானாக....ஆமின்..!
Reply : 0 0
kulathooran Sunday, 11 September 2011 05:53 PM
பல நூற்றுக்கான மக்கள் கலந்து கொண்ட இவரது ஜனாஸா தொழுகை அதிகாலை ஒரு மணிக்கு இடம்பெற்றது. இதுவே அவருக்காக மக்கள் செய்த மரியாதையாகும்.வல்ல நாயன் அவரை பொருந்தி ஜன்னத்து பிர்தௌசை வழங்குவானாக.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago