2025 ஜூன் 11, புதன்கிழமை

உலக சமாதானத்தை வலியுறுத்தி ஆத்மீக பாதயாத்திரை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

உலக சமாதானத்தை வலியுறுத்தி துறைநீலாவணைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஆத்மீகப் பாதயாத்திரையொன்று இடம்பெற்றது.

இந்திய ஆத்மீக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவுநருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பிரதான சீடரான நெதர்லாந்து நாட்டினைச் சேர்ந்த அலக்ஸ் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதான சீடர் அலக்ஸ் தலைமையில் பஜனை நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் பாத யாத்திரை ஆரம்பமானது.

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாதை யாத்திரையானது, பிரதான வீதி வழியாக கண்ணகியம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது.

இதன்போது, ஆத்மீக குரு அலக்ஸிடம் வீதிகளில் திரண்டிருந்த மக்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • bis Monday, 12 September 2011 05:40 PM

    இவர்கள் பாதை யாத்திரை சென்று விட்டால் சமாதானம் வந்துவிடுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10