2025 ஜூன் 11, புதன்கிழமை

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளராக ரஹ்மத் மன்சூர் நியமனம்

Super User   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தினை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரான இவர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் மனித வளம் மற்றும் வியாபார முகாமைத்துவத்தில் முதுமானி பட்டம் பெற்றுள்ளார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழயை மாணவருமாவார்.

தேசிய மற்றும் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருகின்ற ரஹ்மத் மன்சூர், நெஸ்கோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவருமாவார். நெஸ்கோ ஸ்ரீலங்கா அமைப்பின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சமய மற்றும் கல்வி போன்ற பல தொண்டர் சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் இலங்கையின் முன்னணி முஸ்லிம் தலைவரான கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பேரன் ஆவார்.
 


You May Also Like

  Comments - 0

  • m.i.samsudeen Thursday, 15 September 2011 08:01 PM

    இது பெரிய பம்மாத்து. இதனால் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இம்முறை கல்முனையில் சற்று கடினம்தான்.

    Reply : 0       0

    Nusky Friday, 16 September 2011 04:11 AM

    திரும்பவும் கல்முனையின் அரசியல் "காரியப்பர்" குடும்பத்திடம் ஒப்படைக்கப் போறாங்களா..??

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 16 September 2011 05:39 AM

    ஏதோ நல்லது நடக்கட்டும். ஆனால் தப்புப்பா எல்லாத்தையும் கல்முனைக்குத்தான் கொடுப்பதா? மற்ற ஊர் எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா?

    Reply : 0       0

    hameed Friday, 16 September 2011 11:07 AM

    பெயர் பெற்ற காரியப்பரின் பேரன், முன்னாள் அமைச்சர் மன்சூரின் புதல்வர், படித்தவர், மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர், கல்முனை மாநகர சபைக்கு மேயராக வரவேண்டியவர், ரவுப் ஹக்கீமுக்கு இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டது ............

    Reply : 0       0

    meenavan Friday, 16 September 2011 04:23 PM

    சிராஜ்,மர்ஹூம் தலைவரின் தென்கிழக்கு அலகின் முகவெற்றிலை கல்முனை அல்லவா? அதைத்தான் தற்போதைய தலைவர் செய்கிறாரோ? ஒரு வகையில் தேர்தல் பம்மாத்தோ?

    Reply : 0       0

    kulathooraan Friday, 16 September 2011 04:58 PM

    சிராஜ் சொல்லுவது போல தப்புப்பா எல்லாத்தையும் கல்முனைக்கு கொடுத்து கல்முனையில் ஒன்றுமே நடக்கல்ல. மாநகர எல்லைக்கு உட்பட்ட வீதீகலூடாக ஊர் ஊராக பயணம் செய்தால் நிதர்சனமாக அறிந்து கொள்ளமுடியும்.

    Reply : 0       0

    kalmunai nalanvirumbi Friday, 16 September 2011 06:41 PM

    எம்.எஸ்.காரியப்பர் கல்முனையின் அபிவிருத்திக்கு வித்திட்டவர். முன்னால் அமைச்சர் மன்சூர் கல்முனையில் பல கட்டிடங்களையும் அரசாங்க அலுவல்களையும் அமைத்து கல்முனையை அபிவிருத்தி செய்தவர். அவரது புதல்வர் ரகுமத் மன்சூர் கல்முனைக்கு இப்பதவியின் மூலம் நல்லது புரிவார் என்றாள் சந்தோசமே.

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 19 September 2011 05:56 AM

    யாரு வந்தாலும் ஊருக்கு சேவை செய்யனும் ஊருக்கு தேவை அபிவிருத்தி மக்களுக்கு நிம்மதி. எப்போது....

    Reply : 0       0

    IBNU ABOO Saturday, 24 September 2011 01:54 AM

    முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் மிகச்சிறந்த மனிதர். எவ்வளவு தான் இருந்தும் பெருமை இல்லாதவர். கறைபடியாத கரம். நாங்கள் வேறு தொகுதியாய் இருந்தும் எங்களது தனிப்பட்டதும், பொதுவானதுமான பல கோரிக்கைகளை மனிதாபமானத்துடன் நிறைவேற்றிய பண்பாளர். அவரது மகன் நிச்சயமாக சிறப்பாக செயல்படக்கூடியவர். ஏனென்றால் சகல தகுதியும் அவரிடம் காணப்படுகிறது. வரவேற்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10