2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சமூகப் பிரச்சினைகளை வலியுறுத்தி கல்முனையில் திறந்த நாடகம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றினை எவ்வாறு இல்லாதொழிப்பது எனும் கருப்பொருளில் வீதி நாடகத்தினையொத்த திறந்த நாடகமொன்று நேற்று கல்முனை கிறிஸ்டா இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.

ஊழல்களுக்கு எதிராகச் செயற்பட்டு வரும் இன்ரநெஷனல் ட்ரான்ஸ்பேரன்ஸி ஸ்ரீலங்கா அமைப்பும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகமும் இணைந்து – 'மக்களுக்குக் கைகொடுத்தல்' எனும் தொனிப் பொருளிலான நிகழ்வொன்றினை நேற்று வியாழக்கிழமை நடத்தியது. இதன் ஒரு அங்கமாகவே – மேற்படி நாடகம் இடம்பெற்றது.

இந்நாடகத்தினைக் காண பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர். இதேவேளை, இந்ந நிகழ்வின் போது பல்வேறு அரச நிறுவனங்களின் நடமாடும் சேவைகளும் இடம்பெற்றன.

மக்களுக்குக் கைகொடுத்தல் எனும் மேற்படி நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர், ட்ரான்ஸ்பேரன்ஸி இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் அதிகாரிகள், கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் வருகை தந்திருந்ததோடு, பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


You May Also Like

  Comments - 0

  • birdeye Saturday, 22 October 2011 03:28 AM

    That drama expressed many message to public and government officers, and all the best for their fruitful effort to abolish bribery from the country?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .