2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் 'மக்கள் மேடை' நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மக்களுக்குமிடையிலான உறவை விருத்தி செய்வதோடு பிரதேச செயலகம் தொடர்பில் மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'மக்கள் மேடை' என்னும்  நிகழ்வு நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. 

பொதுமக்கள் தமது பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான திறந்த மேடையாக அமைந்த மேற்படி 'மக்கள் மேடை' நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் குறித்துப் பேசினர்.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டு வரும் ட்ரான்பேரன்சி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'மக்களுக்குக் கைகொடுத்தல்' என்னும் முழுநாள் செயற்றிட்டத்தின் ஓரங்கமாகவே மேற்படி 'மக்கள் மேடை' எனும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது காணி தொடர்பான விடயங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தினர் நடந்துகொள்ளும் முறைமை குறித்தே அதிகளவான மக்களால் தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்ட மேற்படி 'மக்கள் மேடை' நிகழ்வில் ட்ரான்பேரன்சி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா அமைப்பு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் புலனாய்வுகள் திணைக்களம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .