2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் 'மகாத்மா காந்தி விருது' விழா

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'மகாத்மா காந்தி' விருது வழங்கும் விழா நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் பல துறைகளிலும் சேவையாற்றிய மும்மதத்தையும் சேர்ந்த 28 பேருக்கு அஹிம்ஸை போராட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அண்ணல் மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதுடன் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பமான இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொறியியலாளரும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் செயலாளருமான சுப்ரமணியம் புன்னிய சீலன் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • sirajudeen Thursday, 27 October 2011 02:31 AM

    யாரும் விமர்சனம் எழுதவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .