Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், அப்பிரதேசத்தை வளப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் - அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.நசீரிடம் உறுதியளித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தனை அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் இன்று பகல் திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் மாகாணசபைக் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போதே முதலமைச்சர் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் தேவைகள், அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாகவுள்ளவை உள்ளிட்ட பல விடயங்களை முதலமைச்சர் சந்திரக்காந்தனிடம் இச்சந்திப்பின் போது, அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் நசீர் விளக்கிக் கூறினார்.
மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
mbm Tuesday, 25 October 2011 09:49 PM
ஜெமீல் சார், நீங்களும் எதாவது கேட்க வேண்டும். அதை கொண்டு வந்து முக்கியமாக பிரதேச வாதமின்றி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். முக்கியம். மறந்திடாதிங்க... நீங்களும் அடுத்த மாகான சபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். சும்மா இங்க பார்த்து சிரிக்காம சந்திரகாந்தன் சாரை பார்த்து ஏதாவது கேளுங்க சார் (சுகமா இருகிறீங்களா என்பதை தவிர...)
Reply : 0 0
Unkal Sakothran Wednesday, 26 October 2011 04:22 AM
ஐயா முதலமைச்காரே அடுத்த எலக்சன் உங்களுக்கும் தான். உங்களை வெல்ல வெச்சதில பாதிப்பேர மறந்திட்டிங்களே ...
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 26 October 2011 08:41 AM
அட்டாளைச்சேனைப் பிரதேசம் இல்லை, அம்பாரை மாவட்டம் எங்கும் தன் ஒத்துழைப்பை வழங்கும் சிறப்பானவர்தான் மாகாண சபை உறுப்பினர் ஜமீல். அதன் உதாரணம்தான் இன்று அட்டாளைச்சேனை தவிசாளர் உறுப்பினருடன் காணப்படுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
ஆனால் நன்றி மறந்த சிலர் அவரால் எத்தனை பேர் இலவசமாக மலேசியா போன்ற நாடுகளுக்கு அதுவும் சாய்ந்த மருதுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார். ஆனால் அவரின் கல்வி நிலையத்தினை உடைத்திருப்பது பாவம் அல்லவா?
Reply : 0 0
Rinas Wednesday, 26 October 2011 09:47 PM
அட்டளைச்சேனை பொதுமக்கள் சார்பாக நன்றி.
Reply : 0 0
safa Wednesday, 26 October 2011 10:19 PM
சிராஜ் நீங்கள் சொல்வது சரிதான்... இருந்தாலும் அவர் யாருக்கு மலேசியா போக வாய்ப்பு வாங்கி கொடுத்தார் அவரை சர்ந்தவர்களுக்குத்தானே வாக்களித்த பொதுமக்களுக்கில்லையே. இந்த பொறுப்புக்கு வந்தால் முடிந்தவரை எல்லோருக்கும் உதவ வேண்டும். அதுதான் மனிதாபிமானம்... இவர்கள் சரியாக இருந்தால் நிச்சயம் எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
Reply : 0 0
nanpan Wednesday, 26 October 2011 11:30 PM
அன்பிற்குரிய சபா அவர்களே சமூகத்தில் ஒருசிலராவது மலேசியாவிற்கு படிக்கச் சென்றுள்ளனர் என்பதையிட்டு பெருமைப்படுங்கள் அல்லாஹ்விற்கு நன்றி சொல்லுங்கள். வாக்களித்தவர்கள் எல்லாம் மலேசியாவுக்கு செல்லவும் மாட்டார்கள் இஅவ்வாறு அனுப்பவும் முடியாது. தயவுசெய்து நடைமுறைச் சாத்தியமானதாக சிந்தியுங்கள்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 27 October 2011 12:29 AM
நான் ஏழாம் ஆண்டு படிக்கும் போது ஜமீல் என்பவர் எங்களுக்கு சாரணியத்தில் பயிற்ச்சி வழங்கினார். அன்றிலிருந்து அவரைப் பார்க்கிறேன் இன்றும் நல்ல முன்னேற்றத்தில்தான் இருக்கிறார்,
அது மட்டுமல்லாது, முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவினால் சாரணியத்தில் விருதொன்று எடுத்திருப்பதும் நானறிந்த விடயம். நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவர் சிறந்த மனிதர் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காக.
Reply : 0 0
நண்பன் Thursday, 27 October 2011 12:31 AM
எங்களூரின் கதாநாயகர்கள் இருவரும் துடிப்பானவர்கள். இவர்களின் உற்சாகத்தில்தான் ஊரின் நலன் தங்கியுள்ளது. நல்லவற்றை செய்யுங்கள்
வாழ்த்துகிறோம். நல்ல சேவை மனப்பாங்கை கொண்டவர்கள்தான் நசீரும் முனாஸும்
எனவே ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்ற பாடலுக்கேற்ப நடக்கவும்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 27 October 2011 12:52 AM
ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்னும் பாடல் பாடியவரும் அந்த பாடல் யாருக்கு பாடப்பட்டதோ அவரும் மரணித்து விட்டார் முஸ்லீம்களின் விடியலை நோக்கிய பயனத்தை ஆரம்பித்த எங்கள் பெரும் தலைவர் ஆயுதம் தூக்காத ஒரே போராட்டம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்று நிமிர்ந்து சொல்லுமளவுக்கு வளர்த்தார் கட்சியினை.....எங்கள் அரசியலின் வழிகாட்டி மர்ஹூம் எம்.எஹ்.எம்.அஷ்ரஃப் அவர்கள்.
Reply : 0 0
pasha Thursday, 27 October 2011 02:37 PM
சிராஜ் அவர்களே சிலருக்கு பதவி கிடைத்ததும் தன்னிலை மறந்து தன்னை கடவுள் தானத்தில் வைக்க விளைகிறார்கள் அதற்கு உதாரணம் தான் அந்த ஆதவன் எழுந்துவந்தான் பாட்டு. இறைவன் பெரியவன்.
Reply : 0 0
safa Thursday, 27 October 2011 04:40 PM
சிராஜ் நீங்கள் நான் சொன்னதை தப்பாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறன் நான் எல்லோரையும் மலேசியா அனுப்ப சொல்லவில்லையே ... எதோ ஒரு வகையில் எல்லோருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும் முடிந்தவரை அதை நிறைவேற்றா விட்டாலும் அதற்க்கு ஒரு step ஆவது எடுக்கலாமே. அதைதான் சொன்னேன். மேலும் நீங்கள் சொல்வது போன்று எல்லோரும் மலேசியா செல்ல முடியாதுதான் தனது சமூகத்து மக்கள் எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்கலாம் இல்லையா ... இது செய்யலாமா இல்லை இதுவும் நடைமுறைக்கு சாத்தியப்படதா? எப்போதுமே செய்யணும் என்கிற நோக்கம் மனதில்.
Reply : 0 0
safa Thursday, 27 October 2011 04:40 PM
மனதில் இருக்க வேண்டும். அதுக்கு பிறகு அல்லாஹ்வின் பொறுப்பு. முதல்ல அது மனதில் உருவாக வேண்டும்...
Reply : 0 0
nanpan Thursday, 27 October 2011 09:21 PM
அன்பிற்குரிய சபா அவர்களே உங்களது விளக்கத்துக்கு நன்றி. எல்லாம் நடை பெற இறைவனிடம் வேண்டுவோம். இன்சாஹல்லாஹ் நடைபெறும். அவர் செய்த சில விடயங்களையாவது நினைவு கூறுவோம். அல்லாஹ் மிகப் பெரியவன்.
Reply : 0 0
safa Thursday, 27 October 2011 11:45 PM
நண்பன் நீங்களுமா???? அவர் நல்லதே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லையே...
உள்ளவனுக்கு சாப்பாடு கொடுத்தா அது விருந்து... அதுவே இல்லாதவனுக்கு கொடுத்தா.... ????
நடந்ததெல்லாம் விடுங்கள். இனி நல்லது நடக்க வாழ்த்தி அல்லாஹ்விடம் எல்லோரும் பிரார்த்திப்போம்....
Reply : 0 0
சிறாஜ் Friday, 28 October 2011 03:37 AM
சபா கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன் நடந்த தப்பினைச் சொன்னேன். இனிமேல் உட்சாப்பு மடையன் என்று சொல்வது யாருன்னு தெரியும் தானே. அந்த உட்சாப்பு மடையன்கள்தான் ஜமீல் சாரின் கல்வி நிலையத்தினை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
நாம் என்ன செய்யலாம்?
Reply : 0 0
செம்பகம் Friday, 28 October 2011 02:58 PM
என்ன பாவம் செய்தது அந்தக் கல்வி நிறுவணம் எம்மையெல்லாம் கிழக்கு மாகாணத்தில் உயர்த்திவிட்ட நன்றிக்காவது செய்யவில்லையே இது பற்றி உலமா சபையோ அல்லது புத்திஜீவிகளோ கேட்கவில்லை என்பதை பார்க்கின்றபோது உள்ளம் அழுகின்றது. இறைவன் ஒரு நாள் பாடம் புகட்டுவான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
2 hours ago