2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் 'திவிநெகும' வேலைத்திட்டம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் போஷாக்கு என்பவற்றை மேம்படுத்தும் நோக்கினான 'திவிநெகும' (மனைப் பொருளாதாரம்) தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம், அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 503 கிரமசேவகர் பிரிவுகளில் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

பிரதேச மட்டங்களில் நடைபெறும் வைபவத்தில் பிரதேச செயலாளர்கள், அரசியல்வாதிகள் விசேட அதிதிகளாகப் பங்குபற்றினர்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சுமார் 150 குடும்பங்கள் இந்த தேசிய வேலைத்திட்டத்தினுள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவ்வேலைத்திட்டத்தினுள் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மனைப் பொருளாதாரம் குறித்து அறிவூட்டப்பட்டதுடன், அவர்களுக்கு மரக்கறி மற்றும் பழச்செடிகளின் விதைகள் அடங்கிய பக்கட்களும் வழங்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் மூன்றாம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாயிப் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை,  கல்முனை பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் 'திவிநெகும' எனும் மனைப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

கல்முனை பிரதேச செயளாலர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரம் நடுதல், சமுர்த்தி பெறும் குடும்பங்களில் புதிய பயனாளிகளை இணைத்துக்கொள்ளுதல்,  பயிர் விதைகளும் நாற்றுக்களும் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
 


You May Also Like

  Comments - 0

  • சாய்ந்தமருது மகன் Friday, 28 October 2011 12:36 AM

    ஐயா அது மகிந்த மாமாட திட்டம். மேயரே உங்களுடைய புதிய சிந்தனையை நோக்கிய பயனத்தை இன்னும் ஆரம்பிக்கல்லியா? 2 வரும் கண்னை மூடி திறப்பதற்குகள் முடிந்து விடுமய்யா.....................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .