2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகளினால் சம்மாந்துறை கிராம மக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

காட்டு யானைகளின் வருகையினால் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது இரவுப் பொழுதைக் கழிப்பதில் பாரிய அச்சத்தை எதிர்நோக்கி வருவதுடன் தமது உயிர் மற்றும் உடமைகளுக்கு உத்தரவாதமற்ற நிலை தோன்றியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இஸ்மாயீல்புரம், வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மஜீட்புரம், கணபதிபுரம், மல்லிகைதீவு, வீரச்சேலை, வீரமுனை, சேவகப்பற்று, கோரக்கோவில், கல்லரிச்சல் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன.

இது தொடர்பில், சம்மாந்துறை மஜீட்புரம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அமீர்அலி தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில், 'காட்டு யானைகள் இரவு வேளைகளில் ஊருக்குள் ஊடுருவுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் தமது வீட்டுத் தோட்டங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறுதான் தமது பாடசாலையின் வேலிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுளைந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் சில நேரங்களில் யானைகள் அங்கே நின்று விடுகின்றது. இதனால் பாடசாலைக்கு மாணவர்கள் வர மறுக்கின்றனர்.

இந்த நிலையிலிருந்து பொதுமக்களையும் அவர்களுடைய உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிபர் அமீர்அலி கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .