2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆலையடிவேம்பு கூட்டுறவு தலைமைக் காரியாலய நிர்வாகக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஆலையடிவேம்பு கூட்டுறவு தலைமைக் காரியாலய நிர்வாகக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் நிதியொதுக்கீட்டில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எஸ்.யு.பிரபாத், ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தவிசாளர் கே.ரத்தினவேல், கல்முனை கூட்டுறவு உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பகுறுத்தீன் உள்ளிட்ட பலர் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .