2025 ஜூன் 25, புதன்கிழமை

இளைஞர் வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

Super User   / 2011 நவம்பர் 20 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தி வரும் இளைஞர் வீட்டு திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை பயனாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி யூ.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீட்டின் சாவியை பயனாளரிடம் ஒப்படைத்தார்.

வீடற்ற இளைஞர்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்குடன் செயற்படுத்தப்படும் இளைஞர் வீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீட்டினை ஏ.எம். றிழ்வான் எனும் இளைஞர் பெற்றுக்கொண்டார்.

நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த வீட்டினை நிர்மாணிப்பதற்காக இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு ஒரு லட்சம் ரூபாவினை வழங்கியிருந்தது. அதேவேளை, மிகுதி நிதியானது – பிரதேசத்திலுள்ள செல்வந்தர்கள், கொடையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.அஸ்லம் சஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் முற்றத்தில் அதிதிகளால் மரக் கன்றுகள் நடப்பட்டன.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சக்தி வீடமைப்பு திட்டத்தின் ஊடாக கல்முனை மாநகர எல்லைக்குள் அமைக்கப்பட்ட வீடுகளினை திறந்து வைக்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட வீட்டினை கையளிகக்கும் நிகழ்வு பிரதேச  இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம். ஜெஸ்மீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மற்றும் பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட வீட்டினை கையளிகக்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஏ.ஜி.அன்வர் பலர் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0

  • uran Monday, 21 November 2011 07:21 PM

    ஊரான் மாட்டை அறுத்து உம்மாட பேரில் கத்தம் ஓதிய சீலம் அட்டாளைச்சேனை நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளின் நிலை.இளைஞ்சர் சேவை மன்றத்தின் அதிகாரிகளை கூப்பிடவில்லையோ?பிரதேச செயலாளர் எங்கயோ? இப்பிரதேசத்தில் இளஞ்சர்கள் இல்லையோ ?சம்மந்தமில்லாமல் ஏதோதோ நடக்குது .

    Reply : 0       0

    janoovar Tuesday, 22 November 2011 03:58 AM

    iv veedukal unmaiyana ealai makkalidam koduthal nanum athanai valthukiren.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 23 November 2011 02:18 AM

    uran நீரும் உமது ஆட்களும் செய்யும் வேலையை இதில் சொல்லக்கூடாது. நல்லா கண்ணை பிடித்து முopத்து பாருq;fs;; இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் காணப்படுகின்றனர், அத்துடன் இங்கு வந்திருக்கும் அதிதிகள் தவிசாளர் நசீர் மற்றும் உறுப்பினர் முனாஸ் இவர்களின் சேவை தெரியுமா? அட்டாளைச்சேனையில் எந்த மூலையில் பார்த்தாலும் இவர்களின் பெயர் சொல்லும் மக்கள் இருக்கினம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .