2025 ஜூன் 25, புதன்கிழமை

அமெரிக்க பிரஜை பாடசாலை மாணவர்களுக்கு உதவி

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

டேவிட் ஆர்கப் பிறைட் எனும் அமெரிக்க பிரஜை துறைநீலாவணை விபுலாநந்தா வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஏழை மாணவர்களுக்கு பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகங்களைப் இன்று புதன்கிழமை பரிசாக வழங்கினார்.

விபுலாந்தா வித்தியாலயத்தின் அதிபர் ரி.ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் என்.சி.எம்.லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எஸ். சிவநாதன் அதிதியாகக் கலந்கொண்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்படி டேவிட் ஆர்கப் பிறைட் எனும் நபர் - துவிச்சக்கர வண்டி மூலம் 32 நாட்களில் 5100 கிலோமீற்றர் தூரத்தினை கடந்து அமெரிக்காவில் சாதனை படைத்ததன் மூலமாகப் பெற்றுக் கொண்ட பணத்திலிருந்தே இந்த மாணவர்களுக்கான அண்பளிப்பினை வழங்கினார்.

இவர் - தெற்காசிய நாடுகளிலுள்ள ஏழை மாணவர்களுக்கு மேற்படி பணத்தின் மூலம் உதவி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • pasha Thursday, 24 November 2011 02:29 PM

    நன்றிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .