2025 ஜூன் 25, புதன்கிழமை

அஷ்ரப் நகர் கிராம உத்தியோகஸ்தர் உடனடி இடைநிறுத்தம்

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

சர்சைக்குரிய அஷ்ரப் நகர் பிரதேச கிராம உத்தியோகஸ்தர் உடனுக்கு அமுல்வரும் வகையில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்று புதன்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட  ஒலுவில் - 1ஆம் பிரிவான அஷ்ரப் நகர் பிரதேச கிராம உத்தியோகஸ்தராக கடமையாற்றிய எம்.சி.ஏ.சாதிக் என்பரே பதிவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாவராவார்.

அஷ்ரப் நகர் பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை தனியார் சிலருக்குச் சொந்தமானவை என ஆவணங்கள் மூலம் பொய்யாக உறுதிப்படுத்தினார் எனும் குற்றத்தின் பேரிலேயே குறித்த கிராம உத்தியோகஸ்தர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றிற்கு வன திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக காணி உத்தியோகஸ்தர் மற்றும் குறித்த கிராம உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, அஷ்ரப் நகர் பிரதேச கிராம உத்தியோகஸ்தர் உடனுக்கு அமுல்வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த கிராம உத்தியோகஸ்தரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் வினவியபோது, அதை அவர் உறுதிப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0

  • min Thursday, 24 November 2011 06:48 PM

    அப்போ அதா முஸ்லிம் அமைச்சர் இல்லையா, அவர் முஸ்லிம்களின் பிரதிநிதி இல்லையா? இதில் நன்றாக விளங்குது அவர் அவருடைய பதவியை எப்பாடி இவ்வளவுகாலம் தக்கவைத்து இருக்கிறார் என்பது. அல்லஹ் எல்லாவற்றுக்கும் போதுமானவன்!

    Reply : 0       0

    ameerudeeen Friday, 25 November 2011 06:33 PM

    அட்டாளைச்சேனை அமைச்சர் என்ன செய்கிறாரோ? சார் ஊர்ல இல்லையாக்கும். அவருக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பா.

    Reply : 0       0

    தம்பி Friday, 25 November 2011 01:08 AM

    தெய்வம் நின்று கொல்லும்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 24 November 2011 11:54 PM

    ஒருத்தர் சொல்லி இருக்கார் நம்ம ஊர் பிரச்சனையை மாகாண அமைச்சரிடம் சொல்ல வேண்டுமாம். ஹி ஹி ஹி பெரிய சிரிப்பு வருதுங்க இதனைப் பார்த்ததும்.

    Reply : 0       0

    meenavan Thursday, 24 November 2011 09:55 PM

    கருத்தை வலியுறுத்தவே அரச அமைச்சர் என குறிப்பிட்டேன். அதில் எனக்கு வெற்றி தான். நம்மவரின் குண்டான் சட்டியில் குதிரையோட்டும் நிலை கவலை அளிக்கிறது, அமைச்சர் எனும் போது முழு நாட்டிக்கும் உரியவர் என்றாலும், எப் பகுதி மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யபட்டாரோ அப்பகுதி மக்கள் நலனில் கூடிய அக்கறை காட்டவேண்டும், இங்கு எந்த கட்சிக்கு வாக்களித்தனர் என்ற மனப்பாங்கு அவசியமில்லை. பொத்துவில், நுரைச்சோலை நிகழ்வுகளை பாடமாக வைத்து, அதா, ஹகீம் இணைந்து அஸ்ரப் நகர மக்களுக்கும், தொழில் இடை நிறுத்தப்பட்டவருக்கும் தீர்வு கொடுங்க.

    Reply : 0       0

    min Thursday, 24 November 2011 09:20 PM

    ஹலோ சியாத் உங்களுக்கு தெரியுமா? நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இன்னுமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதை பற்றி ஏதாவது பேசி இருக்கின்றாரா {......} இன்னும் பல விஷயம் இருக்கின்றது அதை இங்கு பேச விரும்பல்ல மக்கள் பிரதிநிதி என்றால் என்னவன்று தெரியுமா? நம் நாட்டில் அரசாங்கத்துக்கு சோரம் போகும் அரசியல்வாதியை விட்டுவிட்டு மக்களுக்காக மக்களின் பிரச்சினையை பேசக்கூடிய அரசியல்வாதியை இனம் காணவேண்டும் அதுதான் மக்களுக்கு செய்யும் சேவையாக நினைக்கிறேன்! இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    Reply : 0       0

    ummpa Thursday, 24 November 2011 08:43 PM

    மீண்டும் உதயம் ! எல்லாப் பிரசினைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் இதற்கு ஒன்றுமே தீர்வு இல்ல. கடந்த வாரத்தில் அந்த முஸ்லிம் காங்கிரஸ் தான் நெருப்பின் அகோரத்தை கொஞ்சம் குறைத்துவிட்டு சென்றது இதுவும் அப்படியதான் நெருப்பு எரியட்டும் அணைக்க யாராவது வருவர்கள் ஆனால் இவற்றுக்கு நல்ல பாடம் படிபிப்பார்கள் நமது மாவட்டத்து மக்கள் எனவே மாவட்ட உறுப்பினர்கள் இதை ஒரு சகோதரனுக்கு நடைபெற்றதாக நினைத்து இந்த பகுதி பிரச்சினையே எடுதுக்கொண்டால் அதுவே உங்கள் பக்கத்துவீட்டான் பசித்திருக்க?

    Reply : 0       0

    hameed Thursday, 24 November 2011 07:15 PM

    நாட்டாமை தீர்ப்பை மாற்று ...

    Reply : 0       0

    london ziyath Thursday, 24 November 2011 07:14 PM

    வோட்டு போடுவது மரத்துக்கு, பின்னர் உதவி கேட்பது அதாவிடம் ... குறை சொல்வது athaavullaah saiya villai andu ..

    Reply : 0       0

    kalmunaiyaan Thursday, 24 November 2011 02:38 AM

    முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளப் பெருமக்களே!!!!! மாண்புமிகு தலைவர் கடந்தவாரம் வாக்குறுதி கொடுத்தது இதுக்குத்தானா?

    Reply : 0       0

    shane Thursday, 24 November 2011 04:35 PM

    ஏங்க அதாவ இழுக்கிறீங்க... முஸ்லிம் காங்கிரஸ் கு தானே வோட்டு போட்டீங்கே... நம்ம நீதி அமைச்சர கூப்பிடலாமே...

    Reply : 0       0

    Velaautham Thursday, 24 November 2011 03:41 PM

    மிகவும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சனையில் வீரப்பேச்சி மூலம் ஒரு குடும்பக்காரனின் தொழில் அவுட். அவரது தொழிலுக்கு உத்தரவாதம் கொடுக்க முடிமா வீர தலைவருக்கு. முள்ளை முள்ளால்தான் எடுக்கணும். வீரப்பேச்சி அவர்களை உசார் படுத்திட்டு . மீனவனே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு நமது தலைவர்தான் பார்க்கணும். அவருக்குத்தான் நாம வாக்களித்த அதா க்கல்ல .

    Reply : 0       0

    ullooran Thursday, 24 November 2011 03:24 PM

    மீனவன்.... அடுத்து தட்டிக் கேட்கும் அமைச்சர்களும் இடை நிறுத்தம்..............! இவர்களுக்கு தெரியும் தட்டிக்கேட்டால் என்ன நடக்கும் என்று..........

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 24 November 2011 02:31 PM

    அமைச்சர் என்றால் அரசாகத்தான் இருக்கும் மீனவன். அதுசரி பிரதேச செயலாளர் தைரியமாக இருப்பது ஏன் என்று புரியுதா.

    Reply : 0       0

    pasha Thursday, 24 November 2011 02:27 PM

    அட்டளைச்சேனை மக்கள் தமது பிரச்சினைகளை தமது ஊரின் பிரதிநிதியான மாண்புமிகு மாகாண அமைச்சரின் ஊடாக தீர்வு காண வேண்டும்.

    Reply : 0       0

    meenavan Thursday, 24 November 2011 05:04 AM

    இப்போது கிராம உத்தியோகத்தர், அடுத்து பிரதேச செயலாளரின் வேலை இடைநிறுத்தம் செய்யப்படுமா? அரச தரப்பு அமைச்சர் அதாவும், நீதி அமைச்சரும் என்னதான் செய்கிறார்களோ?

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 24 November 2011 04:56 AM

    ஆமாம் மக்கள் இருக்கும் இடம் அவர்களுக்கே. ஆனால் தப்பு செய்பவர் தண்டிக்கப்படுவார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .