2025 ஜூன் 25, புதன்கிழமை

மாநகர உத்தியோஸ்தர்கள் லஞ்சம் பெற்றால் முன்னறிவித்தலின்றி தூக்கி வீசப்படுவார்கள்: கல்முனை மேயர்

Super User   / 2011 நவம்பர் 27 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்காக  உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெற்றால், எதுவித முன்னறிவித்தலும் இன்றி பதவியில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள் என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் சிறந்த மாநகர சபையாக கல்முனையை  மாற்றுவதே எனது பிரதான நோக்கமாகும். இதற்காக மாநகர சபையை மக்கள் மயப்படுத்துவதுடன் அனைத்து செயற்பாடுகளையும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கல்முனை மேயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்காக சபையின் உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியாகள் விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் இந்த மாநகரம் மந்த நிலையில் சென்றமைக்கு உத்தியோகஸ்த்தர்களோ ஊழியர்களோ காரணம் அல்ல. அவர்களை வழி நடத்தியவர்களின் ஆளுமை குறைபாடே காரணம்.

மாநகர சபை உறுப்பினர்கள் பேச்சில் மட்டும் சேவையென்று இருக்காமல் செயலில் அமுல்படுத்த வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்காக தமது பணியினை அர்ப்பணிக்க வேண்டும். முடியாவிட்டால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்திலிருந்து விலக வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து 2008ஆம் ஆண்டுக்காக எமது சபைக்கு வரவேண்டியிருந்த 11 மில்லியன் ரூபா முத்திரை வரியினை நான் ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்திற்கினங்க பிரதி மேயர் நிசாம் காரியப்பரின் முயற்சியில் காசோலையையாக பெற்றுள்ளோம்.

அதற்காக வேண்டி பிரதி மேயருக்கு நான் நன்றி தெரிப்பதுடன் குறித்த பணத்தை பயன்படுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளோம்.

தற்போது, இயங்காத நிலையிலுள்ள மாநகர சபைக்கு சொந்தமான சகல வாகனங்களையும் உடனடியாக திருத்தி மக்களின் பாவனைக்கு செயற்படுத்துமாறு ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதேபோன்று கல்முனையிலுள்ள நகர மண்டபம் மற்றம் மருதமுனையில் உள்ள மக்கள் மண்டபம் ஆகியவற்றை புனரமைப்புச் செய்து விரைவில் மக்கள் பாவனைக்காக விட ஏற்பாடுகளையும் செய்யுமாறு பணித்துள்ளேன்.

மக்கள் சேவையினை நாடி மாநகர சபைக்கு மக்கள்  வருவதனை குறைத்து மக்கள் காலடிக்கு சென்று சேவையினை வழங்கும் நிலைக்கு கல்முனை மாநகர சபையின் செயற்பாடு எதிர்காலத்தில் அமையவுள்ளது.

கல்முனை மாநகர சபையில் ஊடகவியளாலர்களுக்காக நவீன வசதிகளையும் கொண்ட  புதிய பிரிவொன்றை உருவாக்க உள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • sopnam Monday, 28 November 2011 05:13 AM

    எமது வாசகர்களில் சிலர் யார் எது செய்தாலும் அவர்களை மட்டம் தட்டுவதிலேயே குறியாக உள்ளனர். வேலை செய்பாவர் யார், போடோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் யார் என்பது இவர்களுக்கு தெரியாது, ஏன் என்றால் இவர்கள் கிணற்றுத் தவளைகள். என்னதான் ஊர்குருவி உயர உயர பறந்தாலும் ஒருபோதும் பருந்தாக முடியாது. அச்சாணி இல்லா வண்டி முச்சாணும் நகராது, எனவே கல்முனையின் அச்சாணியை அசைத்துப் பார்க்காதீர்கள். அறிவுடையோருக்கு செவ்வரத்தம் பூ நஞ்சா?

    Reply : 0       0

    AHAMED Friday, 02 December 2011 08:06 AM

    முதலில் உங்கள் பதவியை தக்க வைக்க பாருங்கள்

    Reply : 0       0

    J.M. Azhar Tuesday, 29 November 2011 03:15 AM

    நல்லது சிறாஸ் எமது வாழ்த்துக்கள். சிறப்பாக செய்யுங்கள். உங்களுக்காக குரல் கொடுப்போம். சிறந்த அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்.
    முகமட் அஸார்
    கந்தளாய்.

    Reply : 0       0

    hamza Tuesday, 29 November 2011 02:25 AM

    சிராஸ் உங்களுக்கு இன்னும் நம் நாட்டு அரசியல் புரியவில்லை, போக போக தெரியும்.

    Reply : 0       0

    min from qatar Monday, 28 November 2011 08:57 PM

    நல்லவர்களுக்கு தடங்கல் வரலாம். தடங்கலை தண்டி உங்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்!!!

    Reply : 0       0

    safan Monday, 28 November 2011 08:03 PM

    மேயர் தனது பணியை சிறந்த முறையில் செயற்படுத்த வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    pasha Monday, 28 November 2011 07:30 PM

    மேயர் அவர்களே, காலையில் சென்று கையொப்பம் வைத்து விட்டு இடையில் மார்க்கெட் சென்று கறிபுளி வாங்கி வீடு சென்று ஓய்வெடுத்து மாலை மீண்டும் வந்து கையொப்பம் இட்டு செல்லும் நபர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.

    Reply : 0       0

    Senain Monday, 28 November 2011 06:31 PM

    நல்ல நிபந்தனை. இது நம் நாட்டில் கண்டிப்பாக அமுலாகிருந்தால் பல போலிகள் (A/L Certificate, Uni Dip and Degree) வந்திருக்காது.

    Reply : 0       0

    aboo Monday, 28 November 2011 04:07 PM

    நல்ல கருத்தைச் சொன்னீர்கள். இருந்தாலும் நம்மவர்களை திருத்திக் கொள்வதில் காலம் எடுக்காதா?

    Reply : 0       0

    hassanqs Monday, 28 November 2011 03:40 PM

    nanri ungal sevai melum thotara anathu valthkkal .

    Reply : 0       0

    ummpa Monday, 28 November 2011 02:22 PM

    இது கட்டாயம் தேவை. உண்மையும் கூட அவர;களின் பிழை இல்லைதான். நீங்கள் முதல் இவர்களுக்கான வேலை பளு என்ன என்பதை வகுத்து அவர்களிடம் ஒப்படையுங்கள் நிச்சயம் அதன் மூலம் முழு திறனையும் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் திறன் அறியப்பட்டால் நீங்கள் அவர்களின் முயற்சிக்கு முழு பாராட்டுகள் தெரிவிகப்பட வேண்டும் ஏன் பரிசுத்தொகை கூட அவர்களை இந்த லஞ்சம் என்ற நாமத்தில் இருந்து அவர்களை மீது விடலாம். யார் முயற்சியால் சாதனைகள் நடக்கிறதோ அவர்களை குறிப்பிடுவதில் எந்த தப்பும் இல்லை எனவே ஒன்றுபட்டால் உயர்வு.

    Reply : 0       0

    kalmunaiyaan Monday, 28 November 2011 08:24 AM

    பேச்சை குறைத்து செயலை அதிகமாக்குங்கள்...... போட்டோஐவு குறைத்து மக்களின் வருவாயை அதிகமாக்குங்கள்..... . நீங்கள் லண்டனில் வெற்றி பெற்றது போன்று மக்களின் மனதினில் வெற்றி பெறுங்கள் ......இந்த அறிக்கை லஞ்சம் கேட்பவர்களும் அழைப்புக்கு விடுவது... .ஆக நீங்கள் வித்தியாசமா ஏதாவது செய்யுங்கள். உங்கள்.......அடுத்து பாராளுமன்றக் கதிரை உங்களுக்குத்தான்....

    Reply : 0       0

    meenavan Sunday, 27 November 2011 10:13 PM

    மேயரே உங்கள் ஆவேசம் புரிகிறது. என்றாலும் குடலையில் தின்று பழகியவர்கள் குண்டடி பட்டாலும் மாறுவார்களா? இன்னும் மண்ணை தின்றவர்கள் தவிட்டை கண்டால் விடுவார்களா என்ற ஐயம் உள்ளது. நீங்களும் பிரதி மேயரும் இணைந்து செயல்படுவது மா நகருக்கு நல்ல அறிகுறியே. தென் எல்லை 'கேட் வே' இன்னும் நிர்வாணமாக உள்ளது. அதற்கு கல்முனை மாநகர் அன்புடன் அழைக்கிறது எனும் ஆடையை உடுத்துங்கள்.

    Reply : 0       0

    Akkaraipattu Monday, 28 November 2011 03:16 AM

    நல்ல முறுக்கேறிய பேச்சு ......... ஏழை மக்களுக்கான உங்களது சிறப்பான சேவைக்கு நல வாழ்த்துக்கள் ......
    ஆனால் உங்களது கருத்தை நீங்களும் மறக்க வேண்டாம் ....( காலப்போக்கில் ).

    Reply : 0       0

    J.M. Azhar Monday, 28 November 2011 02:05 AM

    நல்லது சிறாஸ் எமது வாழ்த்துக்கள். சிறப்பாக செய்யுங்கள் உங்களுக்காக குரல் கொடுப்போம். சிறந்த அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்.
    முகமட் அஸார்,
    கந்தளாய்.

    Reply : 0       0

    KILAKKIN OOR KURUVI Monday, 28 November 2011 01:14 AM

    சபாஸ் முதல்வரே. ஆனாலும் பாதைகளில் லாம்புகள் எரிவதாக இல்லை. சாய்ந்தமருது எல்லையில் சாய்ந்தமருது என்கின்ற நாமம் எழுதப்பட்ட பலகை இல்லை. மாளிகைகாடு எல்லையில் (:கல்முனை மாநகரம் ; சாய்ந்தமருது உங்களை அன்புடன் வரவேற்கின்றது)
    என்ற வரவேற்பு வார்த்தைகள் எழுதப்பட்டதாக இல்லை .இவைகளையும் கவனத்தில் எடுங்கள் . .


    Reply : 0       0

    rizlan Monday, 28 November 2011 12:54 AM

    nelama

    Reply : 0       0

    harees Monday, 28 November 2011 12:43 AM

    ஆஹா யாரு எதை பேசுவது விவஸ்தை இல்லை

    Reply : 0       0

    hameed Monday, 28 November 2011 12:24 AM

    வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலம் காத்து இருக்கிறது. அதாவுல்லா ஹிஸ்புல்லா போன்று மாநகர அபிவிருத்திக்கும் எழுச்சிக்கும் வித்திடுங்கள் ....

    Reply : 0       0

    kulathooran Sunday, 27 November 2011 11:53 PM

    மேயரே வழி நடத்தியவர்களின் ஆளுமை குறைபாடு என சுட்டிக் காட்டுகிறீர்களோ? எதுவாக இருந்தாலும் இனி நடப்பவை நல்லதாக அமையட்டும். ஓய்வு பெற்ற பீர் போன்று மற்றுமொருவரையும் அடுத்த ஊரிலிருந்து ஆலோசகராக ஏற்படுத்திகொள்ளவும்.

    Reply : 0       0

    Ganesh Sunday, 27 November 2011 11:17 PM

    தேர்தல் வந்தால் வாசல் நிறைய அரசியல்வாதிகள். எங்களுக்கு ஏதும் கஷ்டம் என்றால் உளவு பிரிவாலும் அவர்களை கான முடியாது.
    ஒளிந்து கொண்டு இருக்கும் இக்காலத்தில் இப்படியும் ஒருவர். சிறந்த எதிகாலம் உண்டு.

    Reply : 0       0

    Ganesh Sunday, 27 November 2011 11:01 PM

    சபாஸ் தலைவா! தடங்கலைக் கண்டு தயங்காதே! சிறந்த தலைவனாக நின்று காட்டு! அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இரு! வயிறு வளர்ப்பவர்களுக்கு வழி விடாதே!

    Reply : 0       0

    wazeer latif Sunday, 27 November 2011 10:22 PM

    நல்ல முயற்சி செய்தால் உண்மையான அரசியல்வாதியாகலாம். எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பும் கிட்டும். மக்களும் நன்மையடைவர். வாழ்க வளர்க உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .