2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனையில் சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேசத்தில் காணப்படும் பிரிவு ரீதியான பாதுகாப்பு நிலவரங்கள், டெங்கு நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள், வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பான விடயங்கள் உட்பட பிரிவுகள் ரீதியாக காணப்படும் பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதோடு இதற்கு பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், மாநகரசபை ஆகிய நிர்வனங்கள்  இணைந்து கிராம உத்தியோகஸ்தர்கள், சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள் ஆகியவர்களை உள்ளடக்கியதாக பிரதேச மட்டத்தில் பணியாற்றுதல் என முடிவு செய்யப்பட்டது.

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லெவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் எம்.எஸ்.சிராஸ், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான்பெரேரா, கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமுர்தலிங்கம், கல்முனை பொலிஸ் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பாளர் எஸ்.எம்.சதாத் உட்பட அரச, தனியார் நிர்வனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட சிவில் பாதுகாப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Birdeye Thursday, 01 December 2011 03:32 AM

    Its a good work and if it continue with meaning, we can confirm the Good Governance's are implemented well.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .