2025 ஜூன் 25, புதன்கிழமை

ஒலுவில் துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையின்றி உள்ளனர்: தயாசிறி

Super User   / 2011 டிசெம்பர் 02 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

ஒலுவில் துறைமுகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆக்கபூர்வமான வேலை எதுவுமின்றி இருப்பதாகவும், இலங்கை துறைமுக அதிகார சபை பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

வரவுசெலவுத்திட்டத்தில் துறைமுக அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேற்படி ஊழியர்கள் கடமை நேரத்தின்போது தமது முச்சக்கர வாகனங்களை இயக்கி வருமானம் பெற்றுக்கொள்கின்றனர் எனவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

"இந்த ஊழியர்களுக்கு வேலை எதுவுமில்லை. அவர்கள் சும்மா இருக்கிறார்கள். அதனால் மேலதிக வருமானம் பெறுவதற்காக அவரக்ள் முச்சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். துறைமுக அபிவிருத்தி அமைச்சின் துயரநிலை இது. காலஞ்சென்ற அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்ரப், நல்ல நோக்கங்களுடன் இந்த துறைமுகத்தை நிர்மாணித்தார். ஆனால் இப்போது அது வெள்ளையானையாகி உள்ளது" என அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • kulathooran Saturday, 03 December 2011 05:50 AM

    ஒலுவில் துறைமுகம் மட்டும் வெள்ளை யானையை உருவாக்கியதாக கூற முடியாது. ஹம்பாந்தோட்டை துறைமுகமே வெள்ளை யானை உருவாக்கத்தின் முக்கிய காரணி என்பதையும் தயாசிறி அறிவாரோ?

    Reply : 0       0

    hameed Saturday, 03 December 2011 07:29 AM

    நாட்டுலே எவ்வளவோ பிரச்சினை இருக்கு. எத்தனயோ ஊழியர்கள் சும்மா இருந்து கொண்டு சம்பளம் எடுக்கிறார்கள். இது மட்டும் பொறுக்குதில்ல பாருங்களேன்.

    Reply : 0       0

    Bish Saturday, 03 December 2011 11:17 PM

    ஹமீத்! மற்றவன் பிழை செய்கிறான் என்பதனால் நாம் செய்வது சரி என்றாகி விடாது! மாற்றானுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் நாம் என்பதை மனதில் நிறுத்தி கருத்துகளை இடுங்கள்.

    Reply : 0       0

    mani Sunday, 04 December 2011 12:45 AM

    இப்பதான் எல்லோருக்கும் புரிகிறது. இந்த விஷயம் எப்பவோ நாடாளுமன்றில் பேசப்பட்டு இருக்க வேண்டும். இன்னும் எவ்வளோ இருக்கிறது நாட்டில் அவைகளும் சுட்டிக்கட்டப்படவேண்டும் அல்லாஹு அக்பர் ......

    Reply : 0       0

    பழைய மாணவன் Sunday, 04 December 2011 08:10 PM

    அமைச்சர் சரியாகத்தான் சொல்லியுள்ளார். இது இன்று நேற்றல்ல. ஆரம்பம் முதலே அப்படித்தான் இருக்கின்றது.

    Reply : 0       0

    kalmunaiyaan Monday, 05 December 2011 01:15 AM

    இதக்கு எங்களுக்கு மாண்புமிகு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பதில் வேணும்.....??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .