2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறையில் மரமுந்திரிகை செய்கை ஊக்குவிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா,அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் 4,000 மரமுந்திரிகைக் கன்றுகளை மானியமாக வழங்கும் வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் 07ஆம் கிராமத்தில் முதற்கட்டமாக மரமுந்திரிகை மரநடுகை மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் ரீ.சிவகுமார், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நியாஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.கே.றகுமத்துல்லா, பள்ளிவாசல் நிர்வாகிகள், கிராமோதயசபை உறுப்பினர்கள், கிராமவாசிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .