Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 04 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான பொதுச் சந்தையினை பிரதான வீதியிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் அமைக்க வேண்டுமென்று தான் இப் பிரதேசத்தின் 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் விரும்புகின்றனர்.
இதற்கு மாறாக, ஒரு சிலரின் அரசியல் விருப்பங்களுக்கிணங்க இந்தச் சந்தையினை வேறு இடத்தில் நிர்மாணிப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக செயற்படுவோரை அட்டாளைச்சேனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்' என்று கிழக்கு மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜாவிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் கூறினார்.
அட்டாளைச்சேனை சந்தை பகுதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, அமைச்சர் நவரட்ணராஜா விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இதன்போது, தவிசாளர் நசீர் - அமைச்சரைச் சந்தித்துப் பேசிய வேளையிலேயே மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நெல்சிப் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதான வீதியருகிலுள்ள பிரதேச சபைக் காணியில் பொதுச் சந்தைக் கட்டிடத்தினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், இப்பிரதேசத்திலுள்ள கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்படி சந்தைக் கட்டிடமானது பிரதேச சபைக் காணியில் அமையக் கூடாது எனக் கூறி, கிழக்கு மாகாணசபையினூடாக குறித்த சந்தைக் கட்டிட நிர்மாணத்துக்குத் தடைகளை ஏற்படுத்தி வந்தார்.
ஆயினும், இந்த பொதுச் சந்தைக் கட்டிட விவகாரம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை அண்மையில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து, அட்டாளைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிட நிர்மாணம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மாமொன்றினை எடுக்கும் பொருட்டு, கிழக்கு மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜா தலைமையில் குழுவொன்றினை முதலமைச்சர் சந்திரக்காந்தன் நியமித்தார்.
இதற்கிணங்கவே, கிழக்கு மாகாண அமைச்சர் நவரட்ணராஜா இன்று அட்டாளைச்சேனை சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்து - மக்கள் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டதோடு, சந்தைக் கட்டிடம் அமைய வேண்டுமெனக் கூறப்படும் பிரதேச சபைக் காணியினையும் பார்வையிட்டார்.
இதன்போது, அமைச்சரிடம் தவிசாளர் மேலும் தெரிவிக்கையில்ளூ
'அட்டாளைச்சேனையிலுள்ள பெரும்பான்மை மக்கள் குறித்த இடத்தில்தான் சந்தைக் கட்டிடம் அமைய வேண்டுமென விரும்புகின்றனர்.
ஆனால், அரசியல் குரோதத்தினை மனதில் வைத்துக் கொண்டு அட்டாளைச்சேனையிலுள்ள கிழக்கு மாகாண அமைச்சர் அதைத் தடுக்க முயற்சிக்கிறார்.
இந்த சதுரங்க விளையாட்டில் இவ்விவகாரத்தினை ஆராய்வதற்கான குழுவின் தலைவர் எனும் பெயரில் நீங்களும் நுழைக்கப்பட்டு விட்டீர்கள்.
எனவே, அட்டாளைச்சேனைப் பொதுச் சந்தைக் கட்டிட நிர்மாண விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். பெரும்பான்மை விருப்புக்கு மாறான தரப்பினருக்கு சாதகமான முடிவினை வழங்கி விடாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், இந்தப் பிரதேசம் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டாது' என்றார்.
இதன்போது, அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜெ.எம். இர்ஷாட் உள்ளிட்ட அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.
சிறாஜ் Monday, 05 December 2011 04:46 AM
பொதுச்சந்தை அதே இடத்தில் மக்கள் விருப்பத்துக்கு கட்டவேண்டும் அதனை இன்று பார்வை இட்ட மாகாண அமைச்சர் நவரட்னராஜா அவர்களும் ஏற்றுக்கொண்டார்.
எனவே வீண் வாதம் தேவை இல்லை மக்களின் தேவைதான் முக்கியம் .
Reply : 0 0
meenavan Monday, 05 December 2011 05:20 AM
மு.கா., தே.கா. அரசியல் கயிறு இழுப்பு, தொடர்ச்சி பொது சந்தை விடயத்தில் பொதுவான நிலைப்பாட்டுக்கு வர முடியாதவர்கள், எப்படி அஸ்ரப் நகர மக்களது பிரச்சினையை கையாள்வார்களோ?
Reply : 0 0
pasha Monday, 05 December 2011 03:01 PM
சொந்த ஊரில் சந்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பது கௌரவ மாகன அமைச்சருக்கு தெரியும். ஊரின் அடையாளமான பள்ளிவாசலின் அழகு தோற்றத்தை மறைத்து கட்டடம் அமைப்பதை கௌரவ அமைச்சர் விரும்பவில்லை.
Reply : 0 0
hassanqs Monday, 05 December 2011 04:09 PM
இவர்களது sandaile market illamel poividum pol irrukkuthu.
Reply : 0 0
தம்பி Monday, 05 December 2011 07:47 PM
pasha என்பவரே... பள்ளிவாசல் என்பது அழகு காட்டுவதற்கானதல்ல. அது அல்லாஹ்வைத் தொழுவதற்கான இல்லம்!
பள்ளிவாசல் பற்றிப் பெருமை பேசுவதும், அதன் அழகைப் பெருமையோடு காட்ட நினைப்பதும் - பாவமான செயல். மட்டுமல்ல, இறுதி நாளின் அடையாளமுமாகும்.
அட்டாளைச்சேனையில் ஆயிரம் வாக்குகள் எடுத்த அமைச்சர் உதுமாலெப்பையா, அல்லது 10 ஆயிரம் வாக்குகள் எடுத்த தவிசாளர் நசீரா - அந்த ஊரின் நல்லது கெட்டதுகளைத் தீர்மானிப்பதற்கு பொருத்தமானவர்!
Reply : 0 0
janoovar Monday, 05 December 2011 11:00 PM
அட்டாளைச்சேனை சந்தை தொடர்பாக எப்படியான முடிவுகள் எடுக்கப்படும் என்பதனை இன்னும் சில நாட்கள் பொருத்திருந்து பாருங்கள். கௌரவ மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் அவருடைய ஊர் மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணத்துக்கும் இனம், மதம்பாராது சேவை புரிந்து வருகின்றவர்.
எம் ஊர் மக்கள் எப்போதும் நன்றியினை மறப்பவர்கள் ஒரு ரூபாய்க்கும் பெறுமதி இல்லாமல் கிடந்த இடங்களை அபிவிருத்தி செய்து தற்போது அது கோடிக்கணக்கான விலை போகும் அளவுக்கு அபிவிருத்திகளை திட்டமிட்டு செய்பவர். ஊர் பற்றுடைய எம் மாகாணஅமைச்சர் அவருடைய ஊரின் அபிவிருத்தியினை அவர் திட்டமிட்டு செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இறைவன் அவருக்கு அரசியல் வாழ்வில் நீடுழி நீடுழி வாழ்கை வாழ்வு கொடுக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.
Reply : 0 0
திமுரு Monday, 05 December 2011 11:16 PM
மக்களின் விருப்பபடியே சந்தை அமைய வேண்டும்.. பொதுச்சந்தை பொது மக்களுக்குத்தான்.
Reply : 0 0
nanpan, add Tuesday, 06 December 2011 01:02 AM
தம்பி janoovar, நீங்க சொல்லும் அந்த அமைச்சர் அபிவிருத்தி அபிவிருத்தி எண்டு எங்கட ஊர்ல என்னத்த செஞ்சிருக்காரு எண்டு உங்களுக்கு தெரியாதாக்கும்.! முடிந்தளவு நடக்கின்ற அபிவிருத்திக்கு தடையில்லாமல் இருந்தால் சரிதான்..
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 06 December 2011 03:59 AM
பொதுச்சந்தை அமைக்கும் விடயம் பள்ளியை காரணம் காட்டும் புதிய முஸ்லீம்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது: நாங்கள் என்றும் முஸ்லீம்கள் என்பதனால் பள்ளி தொழுகைக்கு மட்டும்தான், அழகுக்கு அல்ல. இது எங்கள் நபியின் அருள்.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 06 December 2011 04:02 AM
புனித மக்கமா நகரில் இருக்கும் கெளபத்துள்ளாஹ் யாராலும் வெளியில் நின்று பார்க்க முடியுமா? அதன் அழகு உலகிலேயே எதற்கும் ஒப்பிட முடியாத சிறப்பழகு. அதனை உள்ளே போனால்தான் பார்க்கலாம். ஆனால் இங்கே எங்க புதிய முஸ்லீம் அமைச்சர் சொல்வதனைக் கேட்டால் சிரிப்பாக இருக்கு. 5 நேரம் தொழப்போக நேரம் இல்லை. ஆனால் பள்ளியை மறைக்காதிங்கப்பா. ஏன் பள்ளி ஒன்றும் காட்சிப்பொருள் அல்ல என்பது புரியாதா?
Reply : 0 0
pasha Tuesday, 06 December 2011 06:35 PM
மக்கமா நகருக்கும் அட்டளைச்சேனைக்கும் எந்த தொடர்பும் இல்லை அது மலையையும் மடு வையும் ஒப்பிடுவதற்கு சமன்.
Reply : 0 0
s.m.ithrees Wednesday, 07 December 2011 03:04 AM
நல்லது நடக்கட்டும்
Reply : 0 0
Nanpan Add Wednesday, 07 December 2011 03:15 AM
Mr. Pasha இங்கு மக்கமா நகரைப்பற்றி பேசவில்லை, பள்ளிவாசளைப் பற்றிதான் பேசப்படுகிறது, இது புரியாம எங்கேயோ போய்ட்டீங்களே,,, ஐயோ ஐயோ..
Reply : 0 0
senaiyuraan Thursday, 12 January 2012 10:42 PM
சிராஜ் இன்னும் காலம் இருக்குதா? சந்தை கட்டிடத்தை மக்கள் விரும்பும் இடத்தில் கட்டுறதுதானே! ஏன் தாமதம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
34 minute ago