2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கில் வெளிமாவட்ட ஆசிரிய இடமாற்றங்களை நிறுத்தாவிடின் போராட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கில் வெளிமாவட்ட ஆசிரிய இடமாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவ்வாறு இல்லாதுவிடின் ஜனவரி மாதத்தில் போராட்டம் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் பிரட்றிக் ஈபேர்ட் மன்றமும் இணைந்து நடத்தும் மூலோபாயத் திட்டமிடல் தொடர்பான  பயிற்சிப்பட்டறை கொழும்பு மாலபேயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற  அங்குரார்ப்பணக் கூட்டத்தில் மன்ற திட்ட அதிகாரி மொகமட்,  சங்க ஆலோசகர் த.மகாசிவம், வளவாளர் திலகன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Monday, 05 December 2011 07:35 PM

    ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் ஏற்பட்ட இழுபறியில் பின்போடப்பட்ட இடமாற்றத்தை அமுல் நடத்துவதில் மீண்டுமொரு இழுபறி நிலை. மாணவர்களின் கல்வி நிலையை பாதிக்குமா?

    Reply : 0       0

    pasha Monday, 05 December 2011 09:52 PM

    பக்கத்துக்கு வீட்டு பள்ளிகூடத்தில படிப்பித்த வாத்தியார் வெளி இடங்களுக்க செல்ல விருப்பமில்லை . புது ஆசிரியர்களையாவது நியமிக்கும் பொது வெளி மாவட்டங்களில் நியமித்து பின் வயது போன காலத்தில் ஊர் பகுதிக்கு அனுப்பினால்?

    Reply : 0       0

    pottuvilan Wednesday, 07 December 2011 01:13 PM

    I agree with bro.pasha's comment.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .