2025 ஜூன் 25, புதன்கிழமை

'கமநெகும' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

Super User   / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் 'கமநெகும' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலின் ஒருங்கினைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கரைவாகு வாய்க்கால் புனர்த்தாபன வேலைத்திட்டம், பாடசாலைகளின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டம், வடிகான் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம், சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் போன்றவற்றின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டது.

இதற்கு மேலதிகமாக முடிவுறாத வேலைத்திட்டங்களை ஒரு வாரத்திற்குள் முடிவுற செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .