Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் குற்றஞ்ஞாட்டினார்
கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கான 2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வரவு செலவு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதிகளை பகிர்தல் தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை கல்முனையிலுள்ள பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாயலத்தில் நடைபெற்றுள்ளது.
வழமையாக இது போன்ற கூட்டங்களுக்கு வைத்தியசாலைகளின் உயர் அதிகாரிகள் அழைப்பது வழக்கம். எனினும் இன்றைய கூட்டத்திற்கு மாகாண சுகாதர அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டதாக தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு ஜவாத் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு வைத்தியசாலைகளின் உயர் அதிகாரிகள் அழைக்கப்படாமை குறித்து தான் வினவியதற்கு, கிழக்கு மாகாண அமைச்சராகிய தானே அழைப்புவிடுக்க வேண்டாம் என உத்தரவிட்டதாக அமைச்சர் சுபையிர் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டார்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 7 மில்லியன், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 3 மில்லியன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு 5.5 மில்லியன் மற்றும் அட்டளைச்சேனை வைத்தியசாலைக்கு 5 மில்லியன் என குறித்த 29 மில்லியன் ரூபாவை பகிர்வது என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம், பாலமுனை, ஆலையடி வேம்பு போன்ற சிறு வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சம்மாந்துறை, அட்டானைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தும் மாகாண சபை உறுப்பினர்களும் இந்த முறையற்ற விதத்தினால் நிதியொதுக்கீட்டு துணை போகின்றனர் என ஜவாத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல சிறிய வைத்தியசாலைகள் இந்நிதி வழங்களில் புறக்கணிக்கப்பட்டமையினால் குறித்த கூட்டத்தை நான் பகிஷ்கரிப்பு செய்ததோடு, இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரர் மொஹான் விஜயவிக்ரமவசிடம் முறையிடவுள்ளதாகவும் ஜவாத் மேலும் தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாதின் குற்றச்சாட்டு தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிரிடம் வினவியதற்கு,
குறித்த நிதியொதுக்கீடு கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டமைக்கிணங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதியொதுக்கீட்டுக்காக வைத்தியசாலைகளை தெரிவு செய்வதற்கு கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பிலான ஜவாட்டின் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன். அத்துடன் ஜவாத் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை தொகுதியிலுள்ள இரண்டு வைத்தியசாலைகளும் மத்திய அமைச்சின் கீழ் உள்ளன.
இந்த வைத்தியசாலைகளுக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது. இந்த கோபத்தின் காரணமாகவே ஜவாத் இவ்வாறு தேவையற்ற பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றார்.
மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கூறுவது போன்று கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழுள்ள 55 வைத்தியசாலைகளையும் இக்கூட்டத்திற்கு அழைக்க முடியும்.
அவர்களை அழைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வைத்தியசாலையினரும் நிதி கேட்பார்கள். அவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான நிதி எம்மிடம் இல்லை. இதனாலேயே அழைக்கவில்லை என்றார்.
kulathooran Tuesday, 06 December 2011 05:00 AM
மாகான சபை உறுப்பினர்கள் ஜமீல்,துல்சான்,அமீர் போன்றவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனரா?
Reply : 0 0
kalmunaiyaan Tuesday, 06 December 2011 05:20 AM
இதுதான் ஜவாத் வாக்களித்த மக்களுக்கு செய்யும் சேவையா? குற்றச்சாட்டு சொல்வது இலகு.... ஆனா.... சேவை செய்வது கடினம்.....சேவை செய்ய பழகிக்கொள்ள வேணும்...... மற்றவரில் குறை கண்டு கொண்டு இருந்தால்...ஏதனயும் கல்முனைக்கு கொண்டு வரமுடியாது....
Reply : 0 0
ar Tuesday, 06 December 2011 11:29 AM
மற்ற ஊர்களில் மக்கள் இல்லையோ? அக்கரைபற்று ஆதார வைத்தியசாலையும் மத்திய அரசின் கீழ்தான் உள்ளது. இது அமைச்சருக்கு தெரிரியாதோ?
Reply : 0 0
செம்பகம் Tuesday, 06 December 2011 02:46 PM
ஏன் ஐயா உங்களுக்கு சாய்ந்தமருது வைத்தியசாலை நினைவில் வரவில்லையா? அமைச்சர் சொல்லுவது ஓரளவு உண்மையாகயிருந்தாலும் சாய்ந்தமருது நிந்தவுர் வைத்தியசாளையையும் கணக்கிடப்படல் வேண்டும்.
Reply : 0 0
janoovar Tuesday, 06 December 2011 06:42 PM
கௌரவ அமைச்சர் சரியாகத்தான் செய்திருக்கின்றார். ஏன் உங்கள் தலைவரும் ஒரு மத்திய அரசு அமைச்சருதானே. அவரால் நிதி ஒதுக்க முடியாதா.
Reply : 0 0
MOHAMED Tuesday, 06 December 2011 08:55 PM
ஜவாத் சும்மா சொல்ல மாட்டார்.
Reply : 0 0
razeek kalmunai Wednesday, 07 December 2011 01:26 AM
கனவான்கள் கவனிக்க... சகோதரர் ஜவாத் அவர்கள் இறக்காமம், பலமுனை, ஆலயடிவம்பு... போன்ற வைத்திய சாலைக்கு நிதி வழங்கவில்லை என்றுதான் கூறுகிறார் இது பிழையா? சிறிய வைத்திய சாலைகளை புறக்கணிப்பது சரியா ?
Reply : 0 0
piriyan Wednesday, 07 December 2011 02:48 AM
ஜவாத் கூறுவது 100/ உண்மை உள்ளது அக்கரைப்பற்று hospital genral gov: இல்தான் உண்டு.
Reply : 0 0
mansoor Wednesday, 07 December 2011 10:05 PM
இதை யோசிப்பதற்கு, நற்பிட்டிமுனை வைத்தியசாலையில் இல்லையா ?
Reply : 0 0
nan Thursday, 08 December 2011 03:18 AM
ஜவாத் சும்மா சொல்லமாட்டார்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 08 December 2011 03:57 AM
வக்காளத்து வாங்குவோரின் சேப்பு நிறைந்தால் போதும், பக்கத்து வீட்டு மாமி மரணித்தாலும் கவலை இல்லை என்று இருக்கும் கொம்பர்களுக்கு ஜவாத் சொல்வது புரியாது...
Reply : 0 0
rafeek Thursday, 08 December 2011 04:07 PM
நற்பிட்டிமுனை மக்கள் ஒட்டு போடவில்லையா ? ஜாவத் அவர்கேள ... சொல்லுவது நற்பிட்டிமுனை நினைவுக்கு வரவில்லையா?
Reply : 0 0
cma Thursday, 08 December 2011 05:42 PM
neenka eppavum ippadiththan, pidivatham.
Reply : 0 0
cma Thursday, 08 December 2011 05:44 PM
rompa rompa thanks.
Reply : 0 0
ravi Friday, 09 December 2011 01:42 PM
ஜவர்ட், நீங்கள் சும்மா நினைக்க வேண்டாம். அங்கு நமது உரிமை போன்று கலாநிதியும் உண்டு. இது எனது அறிவுரை. நிங்கள் மேலும் அவர்களின் பாராட்டை பெற, அவர்களையும் நினைவில் வையுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
36 minute ago